Skip to main content

அதிகாலை 5 மணிக்கே ஸ்டார்ட்... கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்பனை கன ஜோர்

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Liquor sale at 5AM in Namakkal
கோப்புப் படம் 

 

நாமக்கல் அருகே, அதிகாலை கோயில்களில் சுப்ரபாதம் பாட்டு போடும் போதில் இருந்தே கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்பனையைத் தொடங்கி விடுவதாக பிடிபட்ட குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பரமத்தி வேலூர் காவல் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் காவலர்கள், பரமத்தி வேலூர் பழைய புறவழிச்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்தனர். 

 

விசாரணையில் அந்த வாலிபர், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்ததோடு, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 103 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பரமத்தி வேலூர் நான்கு சாலை, சிவா திரையரங்க பகுதி ஆகிய இடங்களில் அனுமதியின்றி மதுபானங்களை விற்றதாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த சரவணன் என்கிற செந்தாமரைக்கண்ணன் (25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 


இதையடுத்து, எல்லை மேடு பகுதியில் நடந்த சோதனையில் டாஸ்மாக் கடை அருகே கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்ததாக பாலப்பட்டியைச் சேர்ந்த நிஷாந்த் (24) என்பவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 74 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
 

டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பும், இரவு பத்து மணிக்கு மேலும் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிகாலை 5 மணிக்கு கோயில்களில் சுப்ரபாதம் பாட்டு போடும்போதே இவர்களும் சந்துக்கடைகளில் மதுபானங்களை விற்கத் தொடங்கி விடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

இவர்களுடன் தொடர்பில் உள்ள கும்பல் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.