Skip to main content

வாக்குறுதியை மீறி சாராயம் விற்றவர்கள் சிறையில் அடைப்பு!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

Liquor dealers violating promise ... Jail


கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ளது அரசம்பட்டு. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை (50). இவர், அப்பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக அரியலூர், திருக்கோவிலூர், சங்கராபுரம் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. 
 

இந்த நிலையில் அஞ்சலை, 'இனிமேல் கள்ளத்தனமாக சாராயம் விற்க மாட்டேன். உழைத்துச் சாப்பிடுவேன்' என அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளார். அவரது உறுதிமொழியை ஏற்று நன்னடத்தையின் பேரில் அஞ்சலையை போலீசார் விடுதலை செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் அஞ்சலை, கள்ளச்சாராயம் விற்றதால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நன்னடத்தை மீறியதற்காக கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் அஞ்சலை ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின், 151 நாட்கள் அஞ்சலையை சிறையில் அடைக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 


இதேபோன்று சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மீதும் ஏற்கனவே கள்ளச் சாராயம் விற்றதாக கச்சிராபளையம், கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. 
 

சாராயம் விற்க மாட்டேன் என்று உறுதி அளித்து வெளியேவந்த அஞ்சலை, கடந்த வாரம் இந்த ஜெயராமனுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளார். இதனால், அவரையும் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். சொன்னதை மீறி கள்ளச் சாராயம் விற்றவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.