Skip to main content

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது  உச்சநீதிமன்றம்.

 

BB

 

2001 ஆம் ஆண்டு சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் அவரது ஹோட்டலில் பணிபுரிந்த ஜீவஜோதி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தவறான தொடர்பு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில்  ஜீவஜோதியின் கணவர்  பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் 2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

 

BB

 

 

ஜாமினில் வெளிவந்த ராஜகோபால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த ஆயுள் தண்டனையை தற்போது உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.  

 

ஜூலை 7  ஆம் தேதிக்குள் சரணடைய சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

 

 

 

சார்ந்த செய்திகள்