Skip to main content

பரிசோதனையும் செய்வோம், போட்டோவும் எடுத்துக்கொள்வோம் – மேடை சுவாரஸ்யம்!

Published on 09/09/2020 | Edited on 10/09/2020

 

 Let's do an experiment and take a photo - stage fun


திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, ஆய்வுக் கூட்டத்திற்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். முதல்வர் வருகை என்பதால் ஏற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டிருந்தன. அதன்படி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மேடை மற்றும் பந்தல் அமைத்திருந்தனர். அங்கு முன்னாள் முதல்வர் ஜெ' புகைப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் புகைப்படத்தின் அருகில், மேடையில் ஒரு பெண் மருத்துவர், ஒரு பெண் செவிலியரை மாவட்ட சுகாதாரத்துறை நிறுத்தி வைத்தது. முதல்வர் வந்ததும் செவிலியர் அவரது கைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கவேண்டும், மருத்துவர் அவரது உடலில் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும்? முதல்வரை பரிசோதிக்கும்போது எப்படி நிற்க வேண்டும், பரிசோதனை செய்தபின் எப்படி அங்கிருந்து நகர்ந்து தூரமாகச் செல்ல வேண்டும் என ஒரு மணி நேரத்தில் மாவட்ட அதிகாரிகள், முதல்வர் அலுவலக அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் என தனித்தனியாக அவர்களுக்குப் பயிற்சி தந்தனர்.

மேடைக்கு எந்த மருத்துவர், செவிலியரை அனுப்புவது என அதிகாரிகள் ஆரம்பத்தில் டிஸ்கஸ் செய்தபோது, மேடை உட்பட பலவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ'வுக்கு பிடித்த பச்சை வண்ணத்தில் இருக்கும்படி முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அதேபோல் அந்த மருத்துவரையும் பச்சை வண்ண உடை உடுத்திவரச் சொல்லுங்கள் எனச் சொல்லியுள்ளனர். அதன்படி அந்த மருத்துவரும் பச்சை வண்ண பட்டுப் புடவையில் மேடையில் நின்றிருந்தார்.

 

 Let's do an experiment and take a photo - stage fun


முதல்வர் வந்து கிருமி நாசினியைக் கைகளில் தெளித்துக் கொண்டும், உடல் வெப்பத்தை பரிசோதித்துக் கொண்டும் மேடையை விட்டு இறங்கியதும், அந்தப் பெண் மருத்துவரும், செவிலியரும் புன்னகையோடு மீண்டும் மேடையேறி மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெ' படத்துக்கு அங்கிருந்த ரோஜா பூக்களை தூவி அஞ்சலி செலுத்துவது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனைப் பார்த்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேறு சில துறைகளின் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்துவது போல் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இப்படித் தொடர்ந்து பலரும் மலர் தூவி போட்டோ எடுத்ததைப் பார்த்த மற்ற அதிகாரிகளுக்கு இச்சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.