Skip to main content

ஐ.டி. ஊழியர் லாவண்யாவை நேரில் சந்தித்து கே. பாலகிருஷ்ணன் நலம் விசாரிப்பு

Published on 02/03/2018 | Edited on 02/03/2018


 

lavanya


சென்னையில் கடந்த 13ந் தேதி கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வீடு திரும்பிய ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் லாவண்யா அவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (01.03.2018) அவரது வீட்டிற்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். உடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் வி. மகாலெட்சுமி, மாநிலக்குழு உறுப்பினர் ஜி. மஞ்சுளா ஆகியோர் சென்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் (படங்கள்)

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

தமிழ்நாட்டின் பெருமைகளையும் சட்டப்பேரவையின் மாண்புகளையும் சிதைத்து கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைதாப்பேட்டை வேளச்சேரி மெயின்ரோட்டிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கிய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழ  உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட கட்சித்தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

 

 

Next Story

"அதானி உலகப்பணக்காரராக ஆனது மோடியின் சாதனை" - கே.பாலகிருஷ்ணன் 

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

"Adani became the world's richest man is Modi's achievement" - CPIM K. Balakrishnan

 


அதானி உலகப்பணக்காரராக ஆனதை மோடியின் சாதனையாக பார்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, " ஏன் இலவசங்களை பறிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள். இலவசங்களை பறித்து கார்பரேட் நிறுவனங்களை கொழுக்க வைப்பீர்கள். இதை கேள்வி கேட்டல் அண்ணாமலைக்கு கோவம் வருகிறது. அண்ணாமலை நாவடக்கத்தோடு பேச வேண்டும். அவரின் பேச்சு அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

 

உலகப்பணக்காரராக இந்தியர் இருந்தால் எந்த அளவுக்கு நாட்டு மக்களின் பணத்தை அவர் கொள்ளை அடித்து இருக்க வேண்டும். அதானி உலகப்பணக்காரராக வந்தது மோடி அரசின் சாதனை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாபின்னடைவை சந்தித்து வருகிறது. ஆனால் பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு மக்களை நம்பவைத்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.