Skip to main content

ஊரடங்கில் பெரியவரிடம் பணம் கொள்ளை! அவ்வளவு பணம் இல்லீங்க... அலைக்கழிக்கும் போலீசார்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

 

கரோனா ஊரடங்கு காலத்தில் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து நாட்டுக்காக கடும் வெயிலிலும், இரவு கொசுக்கடியிலும் பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார். ஆனால் அந்தத் துறையைச் சேர்ந்த ஒரு சிலரோ இதனைப் பயன்படுத்தி வந்தவரை லாபம் என கொழிக்கின்றனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.  
 

lalgudi


திருச்சி லால்குடி மெயின்ரோட்டில் உள்ள பெரிய பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி வாசலில் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் தன் இறுதி கால வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தார். வங்கி அதிகாரிகளுக்கு வங்கிக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று விட்டுவிட்டனர். 
 

lalkudi

 

தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலில் உலகமே தன்னைக் காத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் வேளையில் அந்தப் பெரியவரும் உடல் சரியில்லாமல் சோர்ந்து போய் நடக்க முயாமல் இருந்தவரைப் பார்த்த அந்த வங்கியில் உள்ள அதிகாரி ஒருவர் இந்தப் பெரியவர் இப்படியே இங்கே இருந்தால் அவர் உயிருக்கு ஏதுவும் பிரச்சனை ஆகிவிடக்கூடாதே என லால்குடி போலிசுக்குத் தகவல் சொல்லி அவரை ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய்ச் சேருங்கள் என்று சொல்லியிக்கிறார். 
 

http://onelink.to/nknapp


சிறிது நேரத்தில் வந்த இரண்டு போலிஸ்கார்கள் அந்தப் பெரியவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது அந்த பெரியவர் வைத்திருந்த மூட்டையில் 2000 ரூபாய் தாள்கள் ஒரு கையில் பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு கட்டு பணம், அத்தோடு இரண்டு கையாலும் அள்ள முடியாத அளவுக்கு 10 ரூபாய் நோட்டுகள் கீழே சரியவும் இந்த பணத்தை பார்த்தவுடன் அந்த போலிஸ்காரர்களின் மூளையில் சபலபுத்தி வெளியே எட்டிபார்க்க ஆரம்பித்தது.  

பெரியவர் மயங்கிய நிலையில் இருந்ததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட போலிஸ்காரர்கள் அந்தப் பணத்தை அப்படியே எடுத்து கொண்டு அந்தப் பெரியவரை அப்படியே தூக்கி அங்கிருந்து கொஞ்சம் தூரம் தள்ளி இருந்த பேருந்து நிறுத்தம் அருகே போட்டுவிட்டு 108-க்கு போன் செய்து, மயக்கமாகி ஒரு பெரியவர் படுத்துக் கிடக்கிறார் என்று தகவல் சொல்லி விட்டு மறைந்தனர்.  
 

lalkudi

 

போலீசாரின் இந்தச் செயல்களைத் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெரியவருக்கு தினமும் உதவி செய்யும் ஒருவர், நமக்குத் தகவல் அளித்தார். நாம் நடந்ததைக் கேட்டோம். 
 

உடைந்த குரலில் பேசிய அவர், சார்… அவர் பெயர் பிச்சை. ஆனா.. இலட்ச கணக்கில் பணம் வச்சிருப்பார் மூட்டையில். ஆனா அது யாருக்கும் தெரியாது. அவரு லால்குடி கோர்ட்டில் குமாஸ்தாவா இருந்தார். அங்குப் பக்கத்தில் உள்ள ஐயங்கார் கேக் கடை ஓனர், தன்னுடைய கட்டிடத்தில் மேலே உள்ள ரூம்களில் வாடகை வாங்கிக் கொடுங்கள். அதற்கு ஒரு ரூம் தரேன் வாட்ச்மேன் மாதிரி இருந்துக்கோங்கன்னு சொல்லி அங்கேயே  இவரைத் தங்க வைத்துவிட்டார். கால போக்கில் அவரால் மாடி மேல ஏற முடியாததால் அப்படியே அந்த இடத்தை விட்டுட்டு இந்த ஸ்டேட் வங்கி வாசலில் உட்கார ஆரம்பிச்சார். வங்கி அதிகாரியும் வங்கிக்கு பாதுகாப்பாக இருக்கட்டுமேன்னு அடைக்கலம் கொடுத்தனர். அவருக்கு அரசாங்கம் கொடுக்கும் முதியோர் பணம் மாதம் மாதம் நான் தான் வாங்கி கொடுப்பேன். அன்றைக்கு அந்தப் பெரியவரிடம் பணம் மட்டும் எப்படியும் ரூபாய் ஒன்றரை இலட்சத்திற்கு மேல் இருக்கும் பணம் எடுத்தவர்கள் பார்த்தால் அடையாளம் சொல்லக்கூடிய அளவில் இருந்த போலிஸ்காரர்கள் தான். ஆனால் நான் மட்டும் தனியே தூரத்தில் இருந்தால் எதையும் தட்டிக் கேட்க முடியவில்லை. இப்படி ஊரடங்கிலும் போலிஸ் மனசாட்சி இல்லாமல் கொள்ளையடிக்குமா? என்று நம்மிடம் புலம்பினார்.

மயக்கத்தில் இருந்து நினைவு திரும்பிய பெரியவர் பிச்சை, தன்னிடம் இருந்த சேமிப்பு பணத்தை கொள்ளையடிப்பட்டதைத் தெரிந்ததும் ஐய்யோ போச்சே என்னோட வங்கி பாஸ்புக், ஒன்றரை இலட்சம் பணம் போச்சு என புலம்ப ஆரம்பித்தார். இவரின் புலம்பலைக் கேட்ட சிலர் லால்குடி காவல்நிலையத்தில் இது குறித்து பேசிய போது, சார் அவ்வளவு எல்லாம் பணம் கிடையாது 35,000 ஆயிரம் தான் இருக்கும். அதை அவரோட வங்கி கணக்கில் டெபாசிட் பண்ணிடுறோம் என இன்னைக்கு நாளைக்கு என ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 

கொள்ளையடித்த பணம் திரும்பக் கிடைக்காத மன உளைச்சலில் உடல்நிலை மோசமாக அவரை ஆம்புலென்ஸ் மூலம் லால்குடி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் அந்த ஏரியா மக்கள்.  

தான் வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக சேர்த்த பணத்தையும் மக்களைக் காக்கும் இந்த போலிஸ் திருடியிருப்பது மனித சமூகத்தில் மனிதநேயம் எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.