Skip to main content

ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் தந்தையைக் கொலை செய்த பா.ஜ.க. பிரமுகர்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

nachiyar kovil

                                            கோபாலன்                          சரவணன்

 

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவரின் தந்தையை பா.ஜ.க. நகரச் செயலாளர் ஒருவர் கொலை செய்த விவகாரம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள நாச்சியார்கோயில் மடவிளாகத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் மண்டல பொறுப்பாளராக இருந்து வந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரது தந்தை கோபாலன் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்ரீ 108 அபிநவ உத்திராதி மடத்தின் மேலாளராக இருந்து வருகிறார். இந்த மடத்திற்கு நாச்சியார்கோயில், கதிராமங்கலம் கும்பகோணம், ஆடுதுறை உள்ளிட்ட பல பகுதிகளில் நிலம் சொத்துகள் இருக்கிறது. இவை அனைத்தையும் கோபாலன் ஒருவரே நிர்வகித்து வருகிறார். 

 

அந்த வகையில் நாச்சியார்கோவில் பகுதியில் மடத்திற்குச் சொந்தமாக பதிமூன்று கடைகள் இருக்கிறது. அதில் ஒரு கடையை பா.ஜ.க. நகர தலைவராக இருந்துவரும் சரவணன் என்பவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்குச் சமீப காலமாக வாடகை வரவில்லை எனக் கடையைக் காலி செய்யச் சொல்லி வற்புறுத்தி இடையூறு கொடுத்திருக்கிறார் கோபாலன். 

 

பா.ஜ.க. நகர தலைவரான சரவணன் இந்தக் கடையை நான், எனக்கு முன்னாடி எங்க அப்பா, தாத்தா என மூன்று தலைமுறையாக வச்சிருக்கோம், நீதிமன்றம் போனால்கூட எங்களுக்குத் தான் சாதகமான தீர்ப்பு வரும். கரோனா முடியும்வரை வாடகை தரமுடியாது எனத் தனது வருமையை ஆத்திரத்தோடு கூறியிருக்கிறார். 

 

இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்காத கோபாலனோ, மடத்தின் மேல்மட்ட நிர்வாகிகளிடம் பேசிவிட்டு, சரவணனிடம் வந்து பேரம் பேசியுள்ளனர். அதற்கும் சரவணன் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு மடத்தின் ஆலோசனைப்படி நீதிமன்றத்திற்குச் சென்றார் கோபாலன். தீர்ப்பு மடத்திற்குச் சாதகமாக அமைந்துவிட்டது. அதோடு கடையை உடனே காலி செய்து கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கொடுக்கப்பட்டது.

 

அந்தத் தீர்ப்புப்படி கடையைக் காலி செய்ய சரவணனை மீண்டும் வற்புறுத்தினார் கோபாலன். கடையைக் காலி செய்து விடுகிறேன். நீங்க பேசியபடி அந்த இரண்டு லட்சம் பணத்தைக் கொடுங்க எனக் கேட்டிருக்கிறார். ''பணம் பேசியது நீதிமன்றத்திற்கு போகாம இருக்க. இப்ப தீர்ப்பு எங்களுக்குச் சாதகமா வந்துடுச்சி, இனிமே பணம் தரமுடியாது'' எனக் கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார். ஆத்திரமடைந்த பாஜக பிரமுகரான சரவணன், மது அருந்திவிட்டு போதையில் கோபாலன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த கோபாலனை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.

 

http://onelink.to/nknapp

 

இந்தக் கொலை விவகாரம் குறித்து நாச்சியர் கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வெளியில் வந்தவரை ஒரு கொடூர கும்பல் கொலை செய்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இந்தக் கொலை நடந்திருப்பது அந்தப் பகுதி மக்களைப் பெரும் பீதியில் தள்ளியிருக்கிறது.

 

நாச்சியார்கோயில் காவல் நிலையம் பகுதியில் சமீப காலமாகவே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், குற்றவாளிகளுக்குக் காவலர்கள் சிலர் ஆதரவாக இருப்பதாகவும், மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அந்தப் பகுதியில் கவனம் செலுத்தி குற்ற நடவடிக்கைகளைக் குறைக்க வழி செய்யவேண்டும் எனவும் பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.