Skip to main content

குமரியில் மூன்றாவது புத்தக திருவிழா

Published on 16/02/2019 | Edited on 16/02/2019
b


குமாி மாவட்ட கல்வி நிறுவனங்கள், தென்னிந்தியா புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம்  இணைந்து  மூன்றாவது புத்தக திருவிழா இன்று (15.02.2019) தொடங்கியது. குமாி மாவட்ட நிா்வாகம் ஒத்துழைப்போடு நடக்கும் இந்த புத்தக திருவிழா நாகா்கோவில் செட்டிக்குளம் அனாதை மைதானத்தில்  தொடா்ந்து 10 நாட்கள் நடக்கிறது. 

 

           இந்த புத்தக கண்காட்சியில் 100-க்கு மேற்பட்ட ஸ்டால்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரபல எழுத்தாளா்களின் புத்தகங்கள் பிரபலமான பதிப்பகத்தாா்களின் வெளியீடுகள் மூலம் கண்காட்சியி்ல் வைக்கப்பட்டுள்ளன. 

 

b

       

   இந்த பிரமாண்டமான  புத்தக கண்காட்சி தினமும் காலை 11மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. மாலை 4 மணி முதல் முக்கிய பேச்சாளா்கள் பங்கு பெறும் கருத்தரங்கம், பட்டி மன்றம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. கலைநிகழ்ச்சிகளில்  கலலூாாி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனா்.

  

            புத்தக கண்காட்சியை மாவட்ட கலெக்டா் பிரசாந்த் வட நேரா தலைமையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் திறந்து வைத்தாா். இதில் மாவட்ட வருவாய் அதிகாாி ரேவதி, நகராட்சி ஆணையாளா் சரவணகுமாா், செய்தி மக்கள் தொடா்பு அதிகாாி நவாஸ்கான் உட்பட அனைத்து துறை அதிகாாிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

சார்ந்த செய்திகள்