Skip to main content

குடும்ப நிலத்தை போலி கையெழுத்திட்டு விற்ற வழக்கு: அரசியல் கட்சி தலைவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

k.s.gita land case hearing on monday

 

சென்னை அடையாறில் உள்ள குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை,  தன்னுடைய சகோதர, சகோதரிகளின் அனுமதியின்றி, போலியாக அவர்களின் கையெழுத்திட்டு,  இரண்டு வெவ்வேறு நபர்களுக்கு விற்ற K.S. கீதா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

 

K.S.கீதா என்பவர் KSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளராக இருந்து வருகிறார்.  மேலும்,  ஊழலுக்கெதிரான சுதந்திரா கட்சியின் தேசிய தலைவராக இருந்து, அந்த அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு,  தன் குடும்பத்திற்கு சொந்தமான நிலங்களை தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனுமதி இல்லாமல்,  போலியான கையெழுத்திட்டு, போலியான ஆவணங்கள் தயார் செய்து,  வேறு இரண்டு நபர்களுக்கு விற்றதற்காக  K.S. கீதாவின் சகோதரர் சரத் கக்குமன்னு மற்றும் அவரது சகோதரி பீனா ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில்,  சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மேற்சொன்ன K.S.கீதா மற்றும் C.R.ரவிச்சந்திரன் என்பவர் மீது, 120(b),419,420,465,467,468,471r/w34 போன்ற இந்திய தண்டனைச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,  சென்னை எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு மாஜிஸ்திரேட்டிடம் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது (CC No. 5241/2020). 

 

இந்த வழக்கானது,  வருகிற திங்கட்கிழமை 18-01-2020 அன்று எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு மாஜிஸ்திரேட்டிடம் விசாரணைக்காக வருகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு சம்பந்தமாக எதிர்த் தரப்புக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில்,  K.S.கீதா மற்றும் C.R.ரவிச்சந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.