Skip to main content

போதை தலைக்கேறியது... தொழிலாளியைத் தீர்த்துக்கட்டிய நண்பர்கள்

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

 

krishnagiri district incident police investigation


கெலமங்கலம் அருகே மதுபோதை தலைக்கேறிய நிலையில், நண்பன் என்றும் பாராமல் கல்லால் தாக்கிக் கொலை செய்த சக நண்பர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள கூட்டூரைச் சேர்ந்தவர் அர்ஜூனப்பா. இவருடைய மகன் பழனி (வயது 26). அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் மகன் சாமி (வயது 19) மற்றும் மாதேஷ் என்பவரின் மகன் கோடாளி என்கிற விஜய் (வயது 23). இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். கூலித்தொழிலாளிகளான இவர்கள், எங்குச் சென்றாலும் ஒன்றாகச் செல்வது, போவதுமாக இருப்பார்கள். 

 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 21) இரவு, மூன்று பேரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் அமர்ந்து மது குடித்தனர். 

 

அப்போது பழனி, விளையாட்டாக விஜய்யை குச்சியால் அடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சாமி, விஜய்யை அடித்தது ஏன் என்று கேட்டபடியே அவரைத் தாக்கியிருக்கிறார். இதனால் இருவருக்கும் பெரிய அளவில் கைகலப்பு ஏற்பட்டது. 

 

அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து பழனியின் தலையில் போட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் பழனி கீழே சரிந்தார். அவரும் போதையில் இருந்ததால் எதிர்த்து தாக்க முடியவில்லை. அதே கல்லை எடுத்து விஜய்யும், பழனியின் மார்பின் மீது போட்டுள்ளார். இதில், அதே இடத்தில் பழனி உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

 

சனிக்கிழமை (ஜன. 22) காலையில் அந்த வழியாகச் சென்ற சிலர், பழனியின் சடலம் கிடப்பது குறித்து கெலமங்கலம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். 

 

சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கெலமங்கலத்தில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த சாமி, விஜய் ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

 

மது போதையில் நண்பர் என்றும் பாராமல் சக நண்பர்களே கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் கெலமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.