Skip to main content

கர்ப்பிணிப் பெண் சுட்டுக் கொலை! - குடிபோதையில் தந்தை வெறிச்செயல்!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

krishnagiri district daughter incident father police investigation

 

குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையைத் தடுக்க முயன்றபோது, ஆத்திரம் அடைந்த தந்தை கர்ப்பிணி மகளை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள வரதேகவுண்டன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி மாதேவி (வயது 54). இவர்களுடைய மகள் வெங்கடலட்சுமி (வயது 23). 

 

இவருக்கும், கர்நாடகா மாநிலம் மாலூரைச் சேர்ந்த சீனா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண் வெங்கடலட்சுமி தற்போது, மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். 

 

யுகாதி பண்டிகையையொட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு வெங்கடலட்சுமி தாய் வீட்டுக்கு வந்திருந்தார். தமிழ்ப்புத்தாண்டு தினமான புதன்கிழமை (ஏப். 14) அன்று அருணாசலம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மாலை 04.00 மணியளவில் அவர், மனைவி மாதேவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

அப்போது இருவருக்கும் தகராறு முற்றியதில் அருணாசலம் மனைவியை நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி சுட்டு விடுவதாக மிரட்டினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகள் வெங்கடலட்சுமி தாயாரைக் காப்பாற்றுவதற்காக தந்தையை தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரத்தில் அருணாசலம் கர்ப்பிணி மகள் என்றும் பாராமல் வெங்கடலட்சுமியை சுட்டார்.

 

தோட்டா உடலைத் துளைத்ததில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் வெங்கடலட்சுமி. கூச்சலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வெங்கடலட்சுமியை மீட்டு, அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த தளி காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதற்கிடையே அருணாசலம் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவர் தளி வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.