Skip to main content

சம்பளம் அதிகம் என்றவுடன் கோயம்பேட்டுக்கு மீண்டும் திரும்பிய தொழிலாளர்கள்... அதிகாரிகள் விசாரணையில் தகவல்!!!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

c


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேட்டில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சுமார் 6,900 பேர்.  கரோனா வைரஸ் தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால், பெரும்பாலானோர் சொந்த மாவட்டங்களுக்கு சென்றனர்.  அவர்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் இன்று வரை 395 பேர்களும், அரியலூர் மாவட்டத்தில் 308 பேர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 298 பேர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 440 பேர்கள் என  கோயம்பேடு மார்க்கெட் மூலம் கரோனா பரவியுள்ளது.


சென்னையில் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் மூலம் ஆயிரம் பேர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூலம் நோய் பரவாமல் சேலம், ஈரோடு, விருதுநகர், கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, நாகை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்கள் தப்பியுள்ளன.  


இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோயம்பேட்டில் வேலை செய்யும்போது ஆரம்பகட்டத்தில் கரோனா பரவல் ஆரம்பித்தபோது நோய் பரவி விடுமோ அச்சம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது பெரும்பாலான தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு வந்து விட்டனர்.   மார்ச் 22 ஊரடங்கு உத்தரவு போக்குவரத்து தடைகள் காரணமாக தமிழகமே ஸ்தம்பித்துப் போயிருந்தது.  

 

 

 

 


இந்த நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட் செயல்பட்டுக் கொண்டிருந்தது.  அங்கு இருந்த தொழிலாளர்கள் நோய் பரவிவிடும் பயம் காரணமாக அவரவர் ஊர்களுக்கு சென்று விட்டதால் மார்க்கெட்டில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  அதனால் அங்குள்ள தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து வியாபாரிகள் லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்கி கடைகளுக்கு அனுப்பியுள்ளனர். இதனை அங்கிருந்த சில தொழிலாளர்கள் நோய் அச்சம் காரணமாக ஊருக்கு சென்றவர்கள் பலருக்கும் போன் செய்து, ஆள் பற்றாக்குறை உள்ளதால் சம்பளம் அதிகமாக கிடைக்கிறது,  அதிக அளவு சம்பாதிக்கலாம் என்று தகவல் அளித்துள்ளனர்.


இதையடுத்து வேப்பூர், திட்டக்குடி,  செந்துறை ஆகிய தாலுகாக்களை சேர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் சென்னை கோயம்பேடு நோக்கி பயணித்தார்கள்.  லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் மீண்டும் சென்னை சென்றவர்கள் கோயம்பேட்டில் நோய் பரவல் அதிகரித்து மார்க்கெட்டை மூடியதும் பயந்து மிரண்டு போய் தங்கள் ஊர்களுக்கு நோய்களை சுமந்துகொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை கோயம்பேட்டில் இருந்து வந்த தொழிலாளர்களிடம் அதிகாரிகள் செய்த விசாரணையில் தொழிலாளர்களே  கூறியுள்ளனர். எனவே இனிவரும் நாட்களில் நோய் பரவல் ஏற்படும் நபர்களை அந்தந்த ஊர்களிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அதிக நபர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் அந்தந்த ஊர்களில் உள்ள சமுதாய நலக்கூடம் பள்ளி வளாகம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

 

இந்த நிலையில் இன்று முதல் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் டீக்கடைகள் திறக்கலாம். ஆனால் பார்சல் டீ மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது அரசு. வெளியூர்களில் இருந்து வாகனங்களில் செல்பவர்கள் டீ குடிக்க செல்லும்போது கையில் பாத்திரம் எடுத்துக் கொண்டு போக முடியுமா? இது என்ன வேடிக்கையான உத்தரவாக உள்ளது என்கிறார்கள் பொதுமக்கள். 

 

டாஸ்மாக் கடையை திறந்து விட்டுவிட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது போல் உள்ளது என்கிறார்கள் வாகன ஓட்டிகள்.  சரி எது எப்படியோ மக்களை சகஜமான வாழ்க்கைக்கு திருப்பி விட்டுள்ளது தமிழக அரசு.  இதையடுத்து கரோனாவின் பரவல் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது” - போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Dont pick up or drop passengers at omni bus depots  Transport Department

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கோயம்பேட்டில் இருந்து கடந்த 10 ஆம் தேதி (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Dont pick up or drop passengers at omni bus depots  Transport Department

இந்நிலையில் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிட்ப்பட்டுள்ள உத்தரவில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கும் இடங்களாக குறிப்பிட வேண்டும்.

ஆம்னி பேருந்துகள் தங்களது பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தவறான புரிதலால் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது. தவறான கண்ணோட்டத்துடன் செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்; பயணிகள் மகிழ்ச்சி!

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Omni buses operate from Coimbatore; Travelers rejoice

சென்னை கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார்.

இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

Omni buses operate from Coimbatore; Travelers rejoice

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து நேற்று (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதை பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.