Skip to main content

ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்குதல்!! சம்பவ இடத்திலேயே பெயிண்டர் உயிரிழப்பு

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
Kovilpatti - Painter

 

 

ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் கோடீசுவரன். 30 வயதான இவர் பெயிண்டராக உள்ளார். புதன்கிழமை கோவில்பட்டி நடுநிலைப்பள்ளி அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இவரை வழிமறித்தது. 

 

தன்னை தாக்க வருகிறார்கள் என்று சுதாரித்த கோடீஸ்வரன், அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். பயங்கர ஆயுதங்களுடன் அந்த கும்பல் அவரை விரட்டியது. கோடீஸ்வரனை ஓட ஓட விரட்டிய அந்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது. இதில் நிலைகுலைந்துபோன கோடீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோடீஸ்வரனை வெட்டி சாய்த்த அந்த கும்பல் சற்று நேரத்தில் அங்கிருந்து தப்பியது. 

 

பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் கோவில்பட்டி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோடீஸ்வரனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

கோடீஸ்வரன் கடந்த ஓராண்டு முன்பு ராக்கம்மாள் என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராக்கம்மாள் தனது பெற்றோர் வீடு உள்ள கடலையூருக்கு சென்றுவிட்டார். 

 

கோடீஸ்வரன் படுகொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதாக என மேற்கு காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த படுகொலை சம்பவ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர் கோவில்பட்டி நகர மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.