Skip to main content

“கொடைக்கானல்  உலகத்திலேயே சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது..” அமைச்சர் பெரியசாமி 

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

"Kodaikanal is one of the best tourist destinations in the world ..." Minister Periyasamy

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள் குளுகுளு சீசன் காலமாகும். இதனை முன்னிட்டு கோடை விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக கோடை விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறையின் சார்பாக கோடை விழா 59வது மலர் காட்சியுடன் தொடங்கியது. இதற்காக பிரையன்ட் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலர்க்கண்காட்சி அமைந்துள்ள இடத்தினை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சக்கரபாணி, மதிவேந்தன் ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறையின் சார்பாக பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

 

அதன்பின் கோடைவிழா மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் தொடங்கியது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கொடைக்கானல் பகுதிக்கு ஆங்கிலேயர் மட்டுமே வந்து சென்ற நேரத்தில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக அதிக அளவு வெளிநாட்டினர் இங்கு வருகை புரிகின்றனர். பல முக்கியத் தலைவர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். தற்போது விடுமுறையைக் கழிக்க பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களை கவரும் விதமாக அட்வெஞ்சர் டூரிசம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சுற்றுலா விரைவில் பிரபலமாகும். 

 

"Kodaikanal is one of the best tourist destinations in the world ..." Minister Periyasamy

 

தமிழகத்தில் அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் வெள்ளைப் பூண்டு மருத்துவ குணம் உள்ளது. இதற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தோட்டக்கலைத் துறையின் சார்பாக விரைவில் சுமார் 1,300 ஏக்கரில் நவீன வெள்ளைப் பூண்டு விவசாயம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் பயன் பெறுவார்கள். விரைவில் சுற்றுலாத் துறை மூலம் அதிக திட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கவர்னரின் அறிவிப்பு கிடைத்தவுடன் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும்” என்று கூறினார்.

 

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், “கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரையன்ட் பூங்கா பகுதிக்கு 6 லட்சத்து 23 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் சுமார் 5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த பூங்காவை மேலும் நன்கு பராமரிக்க வேண்டும். தமிழக முதல்வர் வேளாண்மைத் துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டத்தினை முதல்வர் அறிவித்து தொடக்கி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்” என்று  கூறினார்.

 

"Kodaikanal is one of the best tourist destinations in the world ..." Minister Periyasamy

 

அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசும் போது, “கொடைக்கானல் பகுதிக்கு ஆண்டுக்காண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு வருவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. மேலும் ஒரு வழித்தடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மன்னவனூர் கிராமத்தில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில்  கூடுதலான வசதிகள் செய்து தரப்படும். சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கூடுதலாக விடுதிகள் கட்டப்படும். வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொடைக்கானல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாஸ்டர் பிளான் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

அமைச்சர் மதிவேந்தன், “தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த முதல்வர் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். சுமார் 15 இடங்களை தேர்வு செய்து அங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மன்னவனூர் கிராமத்தில் உள்ள சூழல் சுற்றுலா பகுதியில் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் செலவில் சாகச சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த சின்ன பள்ளம் பகுதியில் 1.25 ஏக்கரில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் ஹெலிகாப்டரில் நகரை சுற்றிப் பார்ப்பதற்காக திட்டமும் பரிசீலனையில் உள்ளது. கொடைக்கானல் நகரில் இருந்து முக்கியமான பகுதிகளுக்கு ரோப்கார் இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் ஊக்குவிக்கும் வகையில் கூடாரம் அமைத்து தங்குவதற்காக தனியாக திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இதுகுறித்து விரைவில் அறிவிப்பார்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.