Published on 13/08/2022 | Edited on 13/08/2022

கோப்புப்படம்
சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் ராஜநாகங்கள், குரங்குகள், மலைப்பாம்புகள் இருந்ததால் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாங்காக்கில் இருந்து சென்னை வந்த "தாய் ஏர்வேஸ்" என்ற விமானத்தில் ராஜ நாகங்கள், குரங்குகள் இருந்தது. உயிருள்ள ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், குரங்குகளை பார்த்து அதிர்ந்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீண்டும் அவற்றை பாங்காக்கிற்கே திருப்பி அனுப்பி உள்ளனர்.