Skip to main content

கீழ்ப்பாக்கம் மனநல காப்பக காதல் ஜோடி திருமணம்; அமைச்சர்கள் பங்கேற்பு

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த மகேந்திரனும் வேலூரைச் சேர்ந்த தீபாவும் குடும்பத் தகராறு மற்றும் தந்தை இறந்த சோகம் என இருவேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். 

 

இவர்களுக்கு, காப்பக இயக்குநர் பூர்ணா சந்திரிகா மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இதில் அவர்களுக்கு மன அழுத்தம் நீங்கி பிரச்சனையிலிருந்து விடுபட, இருவரும் காப்பகத்தில் உள்ள கேர் சென்டரில் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். எம்.ஃபில். படித்துள்ள மகேந்திரன் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கான பயிற்சி மையத்தில் பராமரிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் படிப்பு முடித்த தீபாவும் அதே காப்பகம் சார்பில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

 

அரசு கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதன் பிறகு மகேந்திரனின் காதலை தீபாவிடம் சொல்லியுள்ளார். அப்போது சற்று சுணக்கம் காட்டிய தீபா, காலப்போக்கில் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் காப்பக இயக்குநர் பூர்ணா சந்திரிகாவுக்கு தெரியவந்த நிலையில் இருவரையும் அழைத்துக் கண்டித்துள்ளார். மேலும், அவர்கள் சொன்ன காரணமும் அவர்களின் ஒற்றுமையான பேச்சும் அவர்களின் மனநிலை மேலும் பாதிக்காத வண்ணம் இருக்கும் என முடிவெடுத்த இயக்குநர், இருவருக்கும் தாங்களே திருமணம் நடத்தி வைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி காப்பக மருத்துவர்கள், ஊழியர்கள், நண்பர்கள் என்று பலர் உதவியுடன் புதியதாக வாடகை வீடு, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து கொடுத்துள்ளார்கள்.

 

இந்த நிலையில், இன்று 28.10.2022 தேதி காலையில் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தின் இயக்குநர் பூர்ணா சந்திரிகா, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் மருத்துவர்கள் முன்னிலையில் சித்தி புத்தி விநாயகர் கோயிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்துக் கொடுக்க காதல் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். 200 ஆண்டுகள் பழமையான மனநல காப்பகத்தில் இந்தத் திருமணமே முதல் திருமணமாக தடம் பதித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.