Skip to main content

கேரளா: விளிம்பு நிலை மனிதனுக்கும் ராஜவைத்தியம்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

kerala

 

 

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக நேற்று வரை 10,691 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் காட்டப்பட்டவை. இந்த மரணங்களில் பெரும்பாலும் இணை நோய்களினால் ஏற்பட்ட மரணங்களே அதிகம் என்பதும் உபரி அறிக்கை.

 

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் தொற்று நோயாளிகளின் இணை நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாததும் மரணத்திற்கு காரணம் என்று சமூக நல ஆர்வலர்கள் மற்றும் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கை ஒன்றிலும் கூறியிருந்தார்.

 

ஆனால், அண்டை மாநிலமான கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசிலோ, கரோனா நோயாளி சாமான்யனாலும், சர்வேஸ்வரன் என்றாலும் சிகிச்சையின் அளவுகோல் வேறுபடாமல் நேர்கொண்ட முறையிலேயே பயணிக்கின்றன. மனித உயிரைக் காப்பாற்ற அங்குள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குருஷேத்திரமே நடத்துகின்றனர். அதற்கு சான்றாகவும் எடுத்துக்காட்டாகவுமிருக்கிறது இந்தச் சம்பவம் என்கிறார்கள்.

 

கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலிருக்கும் சாத்தான்கோட்டா பகுதியின் சாதாரண மீன் வியாபாரி டைட்டஸ். அந்த நகரின் சந்தையில் மீன் விற்றால்தான் இவரது குடும்பம் வாழ முடியும். 70 வயதிலும் டைட்டஸ் ஆரோக்யமானவர்தானாம். மீன் மார்க்கெட்டில் கடந்த 80 நாட்களுக்கு முன்பு இவருக்கு கரோனா தொற்று கண்டிருக்கிறது. டெஸ்ட்டிற்கு பிறகு அந்நகர சுகாதாரத் துறையினரால் தாரிப்பள்ளி பகுதியிலிருக்கும் கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். தொற்றின் பலனாய் அவருக்கு சிறு நீரகம், நரம்பு, கல்லீரல், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மருத்துவமனையின் தொடர்புடைய பல்வேறு சிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் இணைந்து துவளாமல் தொடர்ந்து கூட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனராம்.

 

அரசு மருத்துவமனையில் மொத்தம் 72 நாட்கள் சிகிச்சையில் இருந்திருக்கிறாராம். இதில் 42 நாட்கள் தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் டயாலிஸஸ் சிகிச்சையில் இருந்திருக்கிறார். பின்பு அவர் 20 நாட்கள் வரை கோமா நிலைக்கு போயிருக்கிறார். இதனை எல்லாம் மீட்டெடுத்து பரிபூரண குணமடைந்த டைட்டஸ், 72 நாட்களுக்கு பிறகு செப் 23 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார். ஆரம்பம் தொட்டு அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை 72 நாட்களாக அவரின் சிகிச்சைக்காக அரசு செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் 36 லட்சம் ரூபாய்.

 

டைட்டஸால் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 112. கொல்லம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏற்பட்ட மரணம் இன்றுவரை வெறும் 31 பேர்கள் மட்டுமே. இதனையொத்த ஜனத்தொகை கொண்ட நெல்லை மாவட்டத்தின் கரோனா தொற்று மரணம் நாளது வரையிலும் 196 பேர். கடவுளின் தேசத்தில் சாமான்யனுக்கும் ராஜவைத்தியம்தான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.