Skip to main content

கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகம் முன்பு சி.பி.எம். நூதன போராட்டம்! 

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Keerappalayam Union Office Formerly CPM

 

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய பகுதியில் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சமூதாய கூடம் கட்டப்பட்டது. இதில், ஏழை எளிய மக்கள் மிகவும் குறைந்த வாடகையில் திருணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த  10 ஆண்டுகளாகச் சமூதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்காமல் சிமெண்ட் மூட்டைகள், கம்பிகள்  அடுக்கும் குடோனாகப் பயன்படுத்தப்பட்டு பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.


சமூதாய கூடம் இல்லாமல் ஏழைமக்கள் மிகவும் சிரமம் அடைந்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாடகையை கடன் வாங்கி கொடுத்து அப்பகுதி மக்கள் வீட்டு சடங்குகளைச் செய்து வருகிறார்கள். இதுகுறித்து கடந்த 5 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டு போராட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் கடந்த காலங்களில் எடுக்கவில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி கீரப்பாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் சார்பில் ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லையா தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், சிவராமன், செம்மலர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் மேளதாள முழங்கச் சீர்வரிசை பொருட்களுடன் சம்பந்தம் கலக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் சீர்வரிசை பொருட்களுடன் வந்து அலுவலகத்தின் வாயில் தரையில் சீர்வரிசை பொருட்களை வைத்துக்கொண்டு சமூதாய கூடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோசங்களை எழுப்பினார்கள். இதனால் அலுவலக வாயிலில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் ரூ12 லட்சத்திற்கு சமூதாய கூடத்தைச் சீர் செய்வதற்கு திட்டமதிப்பீடு அனுப்பபட்டுளளதாகவும் இதற்கான நிதி அனுமதி கிடைத்தவுடன் சீர் செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். ஒன்றிய அலுவலகத்தில் மேளம் அடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.

Next Story

திருமாவளவனை கிராமத்திற்கு அழைப்பதில் போட்டி; வி.சி.கவினர் இடையே மோதல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Clash between VCk over inviting Thirumavalavan to village

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க., வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன், அமைச்சர் பன்னீர்செல்லம் தலைமையில் புவனகிரி ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். மருதுாரில் ஓட்டு சேகரித்தவர், நிகழ்ச்சியில் திட்டமிட்டவாறு அருகில் உள்ள பகுதிகளுக்கு ஓட்டு சேகரிக்க சென்றார். இதில் வி.சி.க., இளைஞர்கள் கிருஷ்ணாபுரம், நத்தமேடு, ஜெயங்கொண்டம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு தனித்தனியாக அழைத்தனர். அதற்கு திருமாவளவன் நேரம் குறைவாக உள்ளது. பிறகு வந்து சந்திக்கிறேன், திட்டமிட்டவாறு சில கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.

இதில் சிலர் வேறு ஊருக்கு செல்லட்டும் வழி விடுங்கள்.. என்றனர். இதனால் இளைஞர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கெண்டனர். மேலும் எங்கள் ஊருக்கு வரவேண்டும் என கோரி மருதுார் – ஜெயங்கொண்டம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆனதால் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

போலீசார் இல்லாததால் மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் திருமாவளவன் வேறு ஊருக்கு ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின் இரவு 9.00 மணிக்கு தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக எச்சரித்தும் கண்டு கொள்ளாமல் போலீசாரிடம் முரண்பாடாகப் பேசினர். இதனால் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் குறைந்த அளவில் இருந்த போராட்டக்காரர்களை போலீசார்  விரட்டியடித்து  கலைத்தனர்,  இதனால் புவனகிரிக்கு வந்த திருமாவளவன், இரவு காலம் கடந்து வந்ததால் ஓட்டு கேட்காமல் கையை அசைத்தவாறு திரும்பிச்சென்றார்.