Skip to main content

கீரமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் நீட் தேர்வில் 3 வது முறையாக தொடர் சாதனை!

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

k

 

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தவறான முடிவுகளுக்கு போகவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு அரசுப்பள்ளி தொடர்ந்து 3வது வருடமாக நீட் தேர்வில் அதிகமானவர்களை தேர்ச்சி பெற வைத்து சாதனை படைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 75 பேர் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை  எழுதி இருந்தனர். தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை பள்ளி நிர்வாகத்தின் மூலம் ஆசிரியர்களே தேர்வு மையங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

 

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சோபியா 398 மதிப்பெண்களும், சுபதாரணி 260 மதிப்பெண்களும், சுருதி 250 மதிப்பெண்களும், சுவேதா 235 மதிப்பெண்களும், ஜனனி 222 மதிப்பெண்களும் என 5 மாணவிகள் 220 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மேலும் ஆர்த்தி 194, பவிதா 188, ராதா 187, சமீரா பானு 146, சுவேதா 125 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் சில மாணவிகள் 120 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

 

இந்த அரசுப் பள்ளி மாணவிகள் கடந்த 2 ஆண்டுகளில் 11 பேர் தேர்ச்சி பெற்று பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். அதே போல இந்த வருடமும் 5 மாணவிகள் 220 மதிப்பெண்களுக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் இந்த வருடமும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழக அரசின் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் அதிகமான மாணவிகள் மருத்துவப் படிப்பிற்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.  தொடர்ந்து சாதித்து வரும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தையும் மாணவிகளையும் பெற்றோர்களும் கிராமத்தினரும் பாராட்டி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.