Skip to main content

தாயும் குழந்தையும் தூக்கில் பிணமாகத் தொங்கிய அவலம்... 

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

police station

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது ம.கொளக்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் ஆட்கொண்ட நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா (வயது 22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.


தற்போது ஒரு வயதில் மீனலோசனி என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் தங்கள் குழந்தையுடன் கொளக்குடியிலுள்ள அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் பிரியங்காவும் அவரது குழந்தை மீனலோசினியும் வீட்டில் தூக்கில் தொங்குவதாகக் காட்டுமன்னார்கோவில் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். 


அதன்பேரில் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையையும், தாயையும் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தாயும் குழந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

இருவரின் உடலும் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் பெண் மரணம் அடைந்தால் அது குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு காவல்துறையால் பரிந்துரை செய்யப்படும். அதன்படி, சிதம்பரம் கோட்டாட்சியர் விசாரணைக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. 

 

கடந்த ஆறாம் தேதிதான் குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாகக் கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் தாயும் குழந்தையும் இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு அதன் காரணமாக குழந்தையைக் கொன்று விட்டுத் தாயும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பிரியாவின் கணவர் பாலமுருகன் மதுபோதையில் இருவரையும் கொலை செய்தாரா இப்படிப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

 

தாயும் குழந்தையும் ஒரே சமயத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.