Skip to main content

காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ விசாரணை

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

karur thavitupalayam woman incident investigated by rdo 

 

தர்மபுரி மாவட்டம் நல்லப்பட்டியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரின் மகள் மோனிகா (வயது 20) கடந்த ஓராண்டுக்கு முன்பாக தனியார் கல்லூரியில் படித்து வந்த மோனிகா, தனது தோழி வீட்டுக்கு சென்று வரும் போது, திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஸ்ரீராமசமுத்திரம் காவேரி நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் மணிகண்டன் (வயது 25) என்பவருடன் செல்போன் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நட்பானது காலப்போக்கில் செல்போன் வழியாக காதலாக மாறியுள்ளது. கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை மோனிகா தனது வீட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு அவரின் வீட்டில் இருந்த தந்தை மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மோனிகா, மணிகண்டனை திருமணம் செய்து கொண்டு, தர்மபுரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் காதலனுடன் தான் செல்வேன் என்று பெற்றோருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு மணிகண்டனுடன் சென்றுள்ளார். மணிகண்டன் கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால், மோனிகாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே எந்த விதமான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. மணிகண்டன் மற்றும் மோனிகா காட்டுப்புத்தூர் தவிட்டுப்பாளையம் பார்பர் காலனியில், வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மோனிகா கர்ப்பமாகி உள்ளார். இரண்டு மாத கர்ப்பிணியான அவர், தான் குடியிருந்த வாடகை வீட்டில் மின்விசிறிக்கான கொக்கியில் கணவரின் வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த முசிறி டிஎஸ்பி யாஸ்மின், முசிறி இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான காட்டுப்புத்தூர் போலீசார் மோனிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த மோனிகாவின் தந்தை முனிராஜ் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார். இரண்டு மாத கர்ப்பிணியாக தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட மோனிகாவிற்கு திருமணம் நடந்து ஓர் ஆண்டு மட்டுமே ஆவதால் ஆர்.டி ஓ விசாரணை நடைபெற உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.