karur kulithalai nangavaram nearset girl child incident

Advertisment

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், நங்கவரம் பேரூராட்சி பகுதி சவாரிமேட்டை சேர்ந்தவர் தங்கராசு. இவரின் இளைய மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 16).கவிதாவை உள்ளூர் இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கவிதா கடந்த 24 ஆம் தேதி இரவு முதல் காணவில்லை. பல இடங்களில் தேடிக் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில்கவிதாவின் தாய் கலைவாணி புகார் செய்தார்.

இந்நிலையில் கடந்த26 ஆம் தேதி வெள்ளிக்கிழமைகாலை ஊருக்கு அருகில் உள்ள பாசன கிணற்றில் கவிதா சடலமாக மிதந்தார். சடலத்தை முசிறி தீயணைப்பு துறையினர் மீட்டனர். சடலத்தை குளித்தலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பிரேதப் பரிசோதனை முடிந்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த போதுகவிதாவின் சாவில் மர்மம் இருப்பதால் பிரேதத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்துநேற்று 29 ஆம் தேதிகவிதாவின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காகச் சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் குளித்தலை காவல் நிலையத்திற்கு வந்தனர்.

Advertisment

இந்நிலையில் இன்று குளித்தலை போலீசார் இளம்பெண் கவிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக சவாரிமேட்டைச் சேர்ந்த 6வதுவார்டு பேரூராட்சி கவுன்சிலர் செல்லாண்டி (எ) குணசேகரன் (வயது53). அவரது மகன் கஜேந்திரன் (வயது18).குணசேகரனின் மைத்துனர் முத்தையன் (வயது50) ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துஅவர்கள் மூவரையும் இன்று கைது செய்தனர். இருப்பினும்,மேலும் மூன்று பேர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களையும்கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் சிறுமியின் சடலத்தை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.