Skip to main content

விவகாரத்து கேட்பதற்கு மனைவி சொன்ன காரணம்... அதிர்ச்சியில் உறைந்த கணவர் எஸ்.பி.யிடம் புகார்...

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
k

 

 

குமரி மாவட்டத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கரம் பிடித்த காதலியின் கள்ள காதலால் மனமுடைந்த காதலன் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார். 

 

மணவாளக்குறிச்சியை சோ்ந்த ராஜகோபால் 2008-ல் மண்டைக்காடு கோவிலுக்கு சென்றபோது அங்கு வந்த பத்மனாபபுரம் அருகே சாரோடை சோ்ந்த அனுஷாவும் ஒருவருக்கொருவா் பார்த்து இருவரும் காதல் வயப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல் காதலா்களாக சுற்றி திரிந்தனர். நாளடைவில் இவா்களின் காதல் விவகாரத்தை தெரிந்த பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் நண்பா்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனா். பின்னா் கொஞ்ச நாளில் அனுஷா வீட்டில் இருவரையும் ஏற்றுக்கொண்டனா்.

 

இந்த நிலையில் ராஜகோபால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுட்டு துபாய்க்கு ஒட்டல் வேலைக்கு சென்றார். அவா்களுக்கு ஓரு ஆண் குழந்தையும் உள்ளது. இதனை தொடா்ந்து ராஜகோபாலையும் அவனுடைய பெற்றோர்கள் ஏற்று கொண்டனா். இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் அனுஷா ராஜகோபாலிடம் விவகாரத்து கேட்டு மணவாளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டுக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

 

இதையடுத்து துபாயில் இருந்து ராஜகோபால் உடனே ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்த ராஜகோபால் நம்மிடம் கூறும்போது, மனைவி விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் என்னுடைய 11 வயது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவளை சமாதானம் செய்து அவளுடன் சோ்ந்து வாழ முயற்சி செய்தேன். பின்னா் குழித்துறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். 

 

அங்கு விசாரணைக்கு வந்த மனைவி அனுஷா 5 மாதம் கா்ப்பமாக இருப்பதாக கூறியதால் அதிர்ச்சியடைந்தேன். அவளின் கா்ப்பத்துக்கு காரணமானர் தக்கலையில் வங்கி ஓன்றில் பணியாற்றும் ஒரு ஊழியர். நான் துபாயில் இருந்து அவளுக்கு அனுப்பும் பணத்தை எடுக்க செல்லும்போது அந்த ஊழியருக்கும் அவளுக்கும் தொடா்பு ஏற்பட்டு கள்ள காதலா்களாக இருந்துள்ளனா். மேலும் நான் அனுப்பிய 55 பவுன் மற்றும் அவள் பெயரில் வாங்கிய  இரண்டரை சென்ட்  நிலத்தையும் விற்று பணத்தையும் கள்ளகாதலனிடம் கொடுத்துள்ளார்.

 

இதனால் என்னுடைய மகன், நகை, நிலத்தையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளேன். பெற்றோரின் பேச்சை கேட்காமல் காதலிதான் எல்லாமே என நினைத்து நம்பி சென்ற என் வாழ்க்கையை அழித்து விட்டார்கள் என கூறினார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.