Skip to main content

இஸ்ரோ ஆராச்சி மையத்திலும் புகுந்த கரோனா! மூடப்பட்டது ஆராய்ச்சி மையம்!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
kanyakumari thirunelveli

 

 

சென்னைக்குப் புலம் பெயர்ந்தவர்கள் கொத்துக் கொத்தாகச் சொந்த ஊர் திரும்புவதால், கரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்கள் கூட தற்போது உச்சத்தை எட்ட ஆரம்பித்துள்ளது. அதன் தாக்குதல் அணுஆராய்ச்சி மையமான மகேந்திரகிரியின் இஸ்ரோ மையத்தையும் விட்டுவைக்கவில்லை.

 

நெல்லை மற்றும் குமரி மாவட்டம் சந்திக்கிற பார்டரிலுள்ள தென்மேற்குத், தொடர்ச்சி மலையருகேயுள்ளது மகேந்திரகிரி. இங்கே இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரச எரிபொருளான கிரையோஜெனிக் எனும் இயந்திரம் தயாரிக்கும் வளாகம் அமைந்துள்ளது.

 

இந்தக் கிரையோஜெனிக் இயந்திரம் தான் விண்ணுக்கு அனுப்பப்படும் ராக்கெட்களை உந்திக் கொண்டு செல்வதற்குப் பயன்படுகிறது. ஆனால் விண்ணில் செலுத்தப்பகிற ராக்கெட் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தயார் செய்யப்படுகிறது.

 

பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரியின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சுமார் 700 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியர்கள், 250 மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மொத்தத்தில் உச்சக்கட்டப் பாதுகாப்பு பகுதி என்றாக்கப்பட்ட மகேந்திரகிரி மையம், கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட தனிப்பகுதி.

 

இதனிடையே இங்கு பணியாற்றுகிற உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான இளம் இன்ஜினியர் ஒருவருக்குக் கொரோனா அறிகுறி இருந்துள்ளது. உடனே அவர் அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.

 

பின்னர் அவருக்கு அருகிலுள்ள குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிறகு அவர் அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

இதன்பின் அவரோடு தொடர்பிலிருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் அவர் எங்கேனும் சென்றாரா எனவும் கண்காணிப்பிலிருக்கிறது. இதன்பின் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒருநாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊழியர்கள் யாரும் அனுமதிக்கப்பட்ட வில்லை. இஸ்ரோ மையத்திள் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் வள்ளியூர் பிரதீப் குமார் தலைமையிலான தீயணைப்புப் படைவீரர்கள் ஆராய்ச்சி மையம் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். 


மேலும் தொற்று கண்டறியப்பட்ட நபர் எங்கெல்லாம் இருந்தாரோ அங்கெல்லாம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவருக்குத் தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்று புரியாத புதிராகவே உள்ளது. தொடர்ந்து தொற்றுப் பரவலைத் தடுப்பது குறித்து ஆராய்ச்சி மையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டமும் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.                     

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.