Skip to main content

ஃபேஸ்புக் காதலர்களுக்கு திருமணமான 30 நாளில் நடந்த சோகம்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

kanyakumari love marriage couple issue

 

நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்தவர் விஷ்ணு (23). ஸ்டுடியோவில் கேமிரா மேனாகவும் மற்றும் குறும்படம் தயாாிப்பவா்களிடம் கேமிரா மேனாகவும் பணியாற்றிவந்தார். விஷ்ணு தன்னுடைய ரசனையைப் படம் பிடித்து அதை ஃபேஸ் புக்கில் பதிவிட்டு வந்துள்ளார். அந்த ரசனை கொண்ட புகைப்படங்களைப் பாா்த்துத் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட திருப்பூரைச் சோ்ந்த கல்லூாி மாணவி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 21. விஷ்ணுவிடம் நட்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் தொடங்கிய நட்பு, நாளடைவில் காதலாக வளரத் தொடங்கியது. 

 

வழக்கம்போல் பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தொிவித்தனர். இருந்தாலும், அந்தக் காதலர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்யாமல், பெற்றோர்களைச் சம்மதிக்க வைத்து அவர்களின் சம்மதத்துடன் ஆடம்பரமாகத் திருமணம் நடந்தது. காதலர்கள் என்ற நிலையில் இருந்து கணவன் மனைவி என்ற அந்தஸ்துக்கு உயா்ந்தனர். நாகா்கோவிலில் தனியாக வீடு எடுத்து வசித்துவந்த இருவருக்கும் திருமணம் முடிந்து 7 நாட்களிலே வாய் வார்த்தைகளால் விாிசல்கள் ஏற்படத் தொடங்கின. அது வளர்ந்து, இரவு நேரங்களில் விஷ்ணு வீட்டுக்கு வருவதையும் தவிர்த்திருக்கிறார். இதனால் அடிக்கடி நண்பர்கள் உறவினர்கள் வந்து பஞ்சாயத்துப் பேசும் அளவுக்கு இருவருடைய  காதல் வாழ்க்கை கசக்கத் தொடங்கியது.

 

'ஒரு கட்டத்தில் கீதா தாலியைக் கழற்றி வைத்துவிட்டு எனது அம்மா வீட்டுக்குச் சென்று விடுவேன் எனப் பேச', அதற்கு விஷ்ணு, 'அப்படினா நீ தாலியைக் கழற்று' எனக் கூற ஒருத்தருக்கு ஒருத்தர் ஆத்திரத்தைக் காட்ட, இரண்டு நாட்களுக்கு முன், அதாவது திருமணம் முடிந்த 30 ஆவது நாள், இரவு தாமதமாக வந்த விஷ்ணுவைக் கண்டித்து கீதா தாலியைக் கழற்றி கீழே வைத்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த விஷ்ணு, படுக்கையறைக்குச் சென்று திருமணத்துக்கு உடுத்திய வேட்டி சட்டையை அணிந்துகொண்டு தூக்கில் தொங்கினார். கணவனை காப்பற்ற மனைவி கீதா எவ்வளவோ முயன்றும் முடியாததால், அந்த ஆத்திரத்தில் கத்தியை எடுத்து தன்னுடைய கழுத்தையும் அறுத்துத் தற்கொலைக்கு முயன்றவரை அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

 

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த கீதா, தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மீண்டும் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றார். இதற்கிடையில் உடற்கூறு செய்த கணவனின் உடலைப் பார்க்க வேண்டுமென்று கதறி அழுததால் மருத்துவமனையில் இருந்து கழுத்தில் கட்டுடன் கீதாவை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது கழுத்தில் இருந்த கட்டை அவிழ்த்து வீசிவிட்டு மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதனால் மீண்டும் கீதாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.