Skip to main content

நண்பரை பழி வாங்க 6 ஆயிரம் கோழிகளை விஷம் வைத்து கொன்ற நபர் தலைமறைவு!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

kanyakumari district, chickens form incident police investigation

 

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரில் உள்ள அவ்வையாா் அம்மன் கோவில் அருகே சானல் கரை ஓரத்தில் சுரேஷ் (வயது 31) என்பவா் நான்கு கோழிப் பண்ணைகளை அமைத்துள்ளார். அதில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார். கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரிகள் இறைச்சிக்காக கோழிகளை இந்தப் பண்ணையில் வாங்கிச் செல்வது வழக்கம்.

 

இந்த நிலையில் சுரேஷ் தனது இரண்டு கோழிப் பண்ணைகளைப் பராமரித்து, கோழிகளை விற்பனை செய்வதற்காக நண்பர் சாஜனுக்கு கொடுத்துள்ளார். சாஜனும் அதைக் கவனித்து வந்து, லாபத்தில் குறிப்பிட்டத் தொகையை சுரேஷுக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் சாஜன், சுரேஷின் பண்ணையில் இருந்து கோழித் தீவனங்களைத் திருடி, தான் பாா்த்து வந்த பண்ணையில் உள்ள கோழிகளுக்கு கொடுத்து வந்துள்ளார். இதைப் பலமுறை சுரேஷ் கண்டித்தும் கேட்காமல் திருடி வந்துள்ளார். இதனால் சாஜனிடமிருந்து பண்ணைகளைத் திரும்பப் பெற்று, திட்டுவிளையைச் சோ்ந்த ராஜனிடம் சுரேஷ் கொடுத்துள்ளாா். 

kanyakumari district, chickens form incident police investigation

 

சாஜனுக்கு சுரேஷ் மீது கோபம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் (19/02/2021) மாலை சுரேஷின் பண்ணைக்கு வந்த சாஜன், அங்கிருந்த ஊழியா்களிடம் தகராறு செய்துள்ளார். மேலும் சுரேஷ் அப்போது அங்கு இல்லாததால், அவருக்கு கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 20-ஆம் தேதி அன்று அதிகாலையில் பண்ணைக்குச் சென்ற சுரேஷ், ராஜனின் பண்ணையில் உள்ள 6 ஆயிரம் கோழிகள் செத்துக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பண்ணையின் அருகில் விஷப் பாட்டில் ஒன்று கிடப்பதையும் கண்டறிந்தார்.

 

இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் ராஜன் புகார் கொடுத்தார். அதையடுத்து, உடனடியாக கோழிப் பண்ணைக்கு சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோழிகள் குடிக்கும் தண்ணீாில் சாஜன் விஷத்தைக் கலந்ததால், அதைக் குடித்த 6 ஆயிரம் கோழிகளும் இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சாஜன் மீது வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், அவரைத் தேடி வருகின்றனர். 

 

விஷம் கலந்த தண்ணீரைக் குடித்த கோழிகள் இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.