Skip to main content

80 பெண்கள்; 200 வீடியோக்கள்; புனித உடையில் நடமாடிய சாத்தான்!

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

kanyakumari church priest benedict anto arrested

 

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு சூழால் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் 29 வயதான பெனிட்டிக் ஆன்டோ. +2 படிப்பை முடித்த இவர். தத்துவயியல் மற்றும் இறையியல் தொடர்பான படிப்புகளை 7 ஆண்டுகள் படித்துள்ளார். பின்னர், திருத்தொண்டா் பட்டம் பெற்று மலங்கரை கத்தோலிக்க பேராலயத்துக்குட்பட்ட பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட்டில் உள்ள சா்ச்சில் பயிற்சி பாதிாியராக சோ்ந்துள்ளார். அதன் பிறகு 2022-ல் அழகிய மண்டபம் பிலாங்கலை புனித விண்ணேற்பு அன்னை திருத்தலத்தில் பாதிாியராக சோ்ந்துள்ளார். நுனி நாக்கில் ஆங்கிலம், மலையாளம், தமிழ் என சரளமாக பல மொழிகளில் பேசக்கூடிய பாதிாியாா் பெனிட்டிக் ஆன்டோ இறைப்பணியில் சோ்ந்த சில நாட்களிலேயே சர்ச்க்கு வரும் பெண்களிடம், நெருங்கிப் பழகி தன்னுடைய வலையில் வீழ்த்தத் தொடங்கியுள்ளார்.

 

இவருடைய பேச்சில் மயங்கிய பெண்கள், கடவுளுக்கு சேவை செய்யும் உயர்ந்த இடத்தில் இருக்கும் பாதிாியாா் ஒருவர்., இவ்வளவு சகஜமாக நெருங்கிப் பழகுகிறாரே என வியந்து, பாதிாியாரை இறைவனுக்கு சமமாக உணரத் தொடங்கியுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாதிாியாா், திருமணமான பெண்களையும், இளம் பெண்களையும், தனது இனிப்பான பேச்சால் இழுத்துள்ளார். அப்படி சிக்கிய பெண்கள் ஓன்றல்ல இரண்டல்ல.. எண்ணிக்கை சுமாா் 80ஐ தாண்டுகிறது. பெண்களிடம் முதலில் அன்பாக பேசும் பாதிரியார்., அவர்களின் வாட்சப் நம்பரை கேட்டு தெரிந்து கொள்கிறார். பின்னர், அவர்களிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்கிறார். குட் மார்னிங்.. குட் நைட்.. என தொடங்க, தப்பித் தவறி தெரியாமல் ஏதாவது ஒரு பெண் ரிப்ளை செய்துவிட்டால் போதும், உடனே பேச்சுவார்த்தையை வளர்க்கும் பாதிரியார், டபுள் மீனிங்கில் அவரது இச்சைக்கு இணங்குகிறார்களா  என பார்க்கிறார். சில பெண்கள் ஃபாதர் நீங்களே இப்படி பேசலாமா? என அதிர்ச்சி தெரிவிக்க.. அதெல்லாம் சர்ச்சுல தான்.. இங்க நான் ஃபாதர் இல்ல உன்னோட லவ்வர் என அவர்களை மசிய வைக்கிறார்.

 

இப்படி பேசத் தொடங்கும் பெண்களிடம் எல்லாம், இரண்டு ஆப்ஷன்களை கொடுக்கிறார். வீடியோ காலா? நேரிலா? இது இரண்டும்தான் அந்த ஆப்ஷன். இரண்டில் எது வசதி எனக் கேட்கிறார். அதற்கு அந்த பெண்கள் எந்த பதில் சொன்னாலும், கெஞ்சிக் கூத்தாடியாவது ஒப்புக்கொள்ள வைக்கிறார். பின்னர், வீடியோ கால் வரச் சொல்லி, தான் விருப்பப்பட்டதைப் போல செய்ய வைக்கிறார். அவை அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட்டுகளாக எடுத்து வைத்துக்கொள்கிறார். பின்னர், வீடியோவாகவும் பதிவு செய்துகொள்கிறார். இது அந்த பெண்களுக்கு தெரியாது எனக் கூறப்படுகிறது. இதுபோல பல பெண்களுடன் பழகி 200க்கும் மேற்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் தன்னுடைய ஸ்மாா்ட் போன் மற்றும் லேப்டாப்பில் பதிவுசெய்து வைத்துள்ளாா். 

 

இந்நிலையில் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜியோ என்பவர், பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக அவர் இளம் பெண்களுக்கு அனுப்பிய ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவுக்கும் மாணவன் ஆஸ்டின் ஜியோவுக்கம் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாதிரியார் பெனிடிக் ஆன்டோ, கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஆஸ்டின் ஜியோ தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் கூறியிருந்தார். முழுதாக விசாரிக்காத போலீசார், பாதிரியார் அளித்த புகாரின் பேரில் மாணவர் ஆஸ்டின் ஜியோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக பாதிரியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் பாதிரியாரின் லேப்டாப்பை எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில்தான், அவர் சந்தேகப்பட்டது போல பல பெண்களின் வீடியோக்கள் இருந்துள்ளது.

 

இந்த நிலையில்தான், பாதிரியாரால் சிறைக்கு அனுப்பப்பட்ட காட்டத்துறை ஆலந்தட்டுவிளையை சோ்ந்த சட்டக்கல்லூாி மாணவரின் தாயாா் மினி அஜிதா, காவல் கண்காணிப்பாளரை சந்தித்து, பாதிரியாாின் லீலைகள் குறித்து புகாா் கொடுத்தார். அந்த புகாருடன் பாதிரியாருக்கு எதிராக, ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங், முக்கிய ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சமர்ப்பித்தார். இதற்கிடையே கடந்த 11 ஆம் தேதி ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ, இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதேபோல, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் குமரி போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் அளித்தார். இதனடிப்படையில், பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவான பாதிரியார் பெனிடிக் ஆன்டோவை இன்று  போலீசார் கைது செய்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.