Skip to main content

கனியாமூர் மாணவி செல்போன் விவகாரம்; மாணவியின் தாயார் பேட்டி

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

Kaniyamoor student cell phone issue; Student's mother interviewed

 

கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கை முதலில் மாநில காவல்துறை விசாரித்து வந்தது. பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மாணவி உபயோகித்த செல்போனை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

 

கனியாமூர் பள்ளி மாணவியின் தாயார் செல்வி சிபிசிஐடி விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் எனத் தெரிவித்து வழக்கறிஞருடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்தார். ஆனால், விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி காவல்துறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு விதித்துள்ளது. அதனால் நீங்கள் அங்கே ஒப்படையுங்கள் எனத் திருப்பி அனுப்பிவிட்டார். 

 

இதனைத் தொடர்ந்து மாணவியின் தாயார் செல்போனை சிபிசிஐடி காவல்துறை ஏடிஎஸ்பி கோமதியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாணவியின் தாயார், “சிபிசிஐடி காவல்துறையினர் இவ்வழக்கில் ஒருதலைபட்சமாகவே செயல்படுகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிக்குத்தான் துணை நிற்கின்றனர். ஆனால், கொலையைக் கண்டுபிடிக்க எந்த ஒரு முயற்சியையும் அவர்கள் செய்யவே இல்லை. அவர்கள் இதை தற்கொலையாக மாற்றுவதற்கு ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.

 

செல்போனை வைத்து ஏதாவது பெரிதாகச் செய்யலாம் என்பது சிபிசிஐடியின் முழு நோக்கமாக இருக்கிறது. அதனால் ஐஎம்இஐ நம்பர் கேட்பார்கள். எங்களிடம் இல்லாத நம்பர்களை எல்லாம் கேட்கிறார்கள். அதற்கு விளக்கம் கொடுங்கள் என்றாலும் தரமாட்டார்கள். அதனோடு டிவைஸ் நம்பர் என்று ஏதோ கேட்பார்கள். அதுக்கும் எங்களுக்கு சம்பந்தம் இருக்காது. அந்த டிவைஸ் நம்பருக்கு அர்த்தம் சொல்லுங்கள் என அவர்களிடம் பலமுறை கேட்டுள்ளேன். அதற்கும் விளக்கம் கொடுக்க மாட்டார்கள். 

 

சம்மன்களை அடிக்கடி கொடுத்து எங்களை மன உளைச்சளுக்கு ஆளாக்குவார்கள். இந்நிலையில், செல்போனை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இன்று ஒப்படைக்க வந்துள்ளோம். விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பது தான் எனக்கு முழுத்திருப்தியாக இருந்தது. ஆனால், சிபிசிஐடியிடம் தான் ஒப்படைக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவே அப்படித்தான் உள்ளது. அதனால் முறைப்படி சிபிசிஐடியிடம் ஒப்படைத்துவிடுங்கள் எனக் கூறிவிட்டனர்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.