Skip to main content

வேளாண் சட்டங்களின் விளைவுகளை கிராமசபைக் கூட்டத்தில் பேசிய கனிமொழி!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

Kanimozhi speaking at the village council meeting on the effects of agricultural laws!


கரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி காந்தி ஜெயந்தியன்று நடக்கவிருந்த கிராம சபைக் கூட்டத்துக்கு தடை விதித்தது முதல்வர் எடப்பாடி அரசு. எளிய மக்களுக்கான ஜனநாயகம் என வர்ணிக்கப்படும் கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தத்தை ஜனநாயக சக்திகளால் ஜீரணிக்க முடியவில்லை.

 

இந்த நிலையில், எடப்பாடி அரசின் தடையை உடைத்து நேற்று தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறது தி.மு.க. ஒவ்வொரு கூட்டத்திலும் தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசூர் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டார்.

 

கனிமொழி கலந்துகொண்ட கூட்டத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, ஒன்றியச் செயலாளர்கள் பாலமுருகன், ஜோஷப், ஊராட்சி மன்றத் தலைவர் தினேஷ் ராஜாசிங் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய கனிமொழி, கிராமசபைக் கூட்டத்தின் வலிமையையும், மக்களுக்கு இருக்கிற உரிமைகளையும் விரிவாக எடுத்துரைத்தார். சமீபத்தில் மோடி அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களின் விளைவுகளையும், அந்தச் சட்டங்களை தற்போதைய அ.தி.மு.க அரசு ஆதரித்திருப்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார் கனிமொழி.

 

இதனையடுத்து, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டியன்பட்டினம் கடற்பகுதியில் உருவாகியிருக்கும் மணல் திட்டுகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், கரோனாவால் வாழ்வாதாராம் இழந்து தவிக்கும் மக்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களையும் வழங்கினார் கனிமொழி.

 

Ad

 

இதற்கிடையே கடந்த 30ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செயத கனிமொழி, திருச்செந்தூர் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஃபேவர் ப்ளக்ஸ் பதிக்கும் திட்டத்தை தொகுதிக்குட்பட்ட புன்னைக்காயல் பகுதியில் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, சொக்கன்குடியிருப்பு கிராமத்தில் நிலத்தகராறு தொடர்பாக கடத்தி கொலை செய்யப்பட்ட செல்வன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, என்ன நடந்தது என்பதை கனிமொழியிடம் சொல்லி கதறியிருக்கிறார்கள் செல்வனின் குடும்பத்தினர். அவர்களுக்கு ஆறுதல் சொன்ன கனிமொழி, உங்களுக்கு தி.மு.க துணை நிற்கும் என உறுதியளித்திருக்கிறார். இதனையடுத்து, காயல்பட்டினம் பகுதியில், காயல் வெட்டரன்ஸ் கோப்பைக்கான கால்பந்தாட்டம் தொடரின் இறுதிப் போட்டியை துவக்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் கனிமொழி. தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழியின் இந்தச் சுற்றுப்பயண நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கிறார் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.