Skip to main content

ஐந்து பெண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாணராமன் -நான்காவது மனைவி புகார்!

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

 Kalyanaraman cheated five women - fourth wife complains!

 

கடலூர் மாவட்டம் மேலகுப்பம் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர் புதுச்சேரி அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் 'புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகம் (42), அவருடைய தாயார் வசந்தா ஆகிய இருவரும் காயத்ரி வீட்டிற்கு பெண் கேட்டுவந்தனர். அப்பொழுது  உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் பெண் கொடுக்க சம்மதித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 27.07.2020 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது 21.08.2020 அன்று புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.  அப்பொழுது கரோனா ஊரடங்கு என்பதால் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க முடியவில்லை. 

 

அவரை திருமணம் செய்து கொள்வதற்காக வரதட்சணையாக 6 பவுன் தங்க நகை, இரு சக்கர வாகனம் மற்றும் பீரோ கட்டில் வழங்கப்பட்டது. மூன்று மாதங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் காயத்ரியிடம் அதிகப் பணம், அதிக நகை கேட்டு தினந்தோறும் தகராறு செய்து அடித்துத் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து காயத்ரி தன் தாயிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக தாய் காயத்ரியின் மாமியார் வீட்டிற்கு வந்து அவர்களிடம்  பேசி காயத்ரியை தன் வீட்டிற்கு  அழைத்துச் சென்றார். அப்பொழுது  காயத்ரி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.  தாய் வீட்டிற்கு வந்த பிறகு கணவர் என்னை வீட்டிற்கு வந்து பார்க்கவுமில்லை,  பேசவும் இல்லை. ஆதலால் காயத்ரி ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டதற்கு, ' நீ எனக்கு மனைவியே இல்லை'  என்று  உதாசீனப்படுத்தினார்.

 


கணவர் பேசாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க அவரை பற்றி விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே 3 மனைவிகள் உள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதில் முதல் மனைவி அனிதா என்கிற இந்திரகுமாரி,  இரண்டாவது மனைவி தேவி, மூன்றாவது மனைவி கனகவல்லி ஆகியோரை திருமணம் செய்ததும், தன்னை நான்காவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து காயத்ரி பிரசவத்திற்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது புதுச்சேரி வம்பாகீரபாளையத்தை சேர்ந்த பிரேமா என்கிற பிரபாவதியை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது.

 


காயத்ரியை திருமணம் செய்யும் போது முதல் மனைவி அனிதாவுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறி  திருமணம் செய்துள்ளார். ஆனால்  இருவருக்கும் விவாகரத்து ஆகவில்லை. இப்படித் தொடர்ந்து ஐந்து  பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து காயத்ரி கேட்டபோது  அடியாட்களை வைத்து அடிக்கவும், கொலை செய்யவும் திட்டம் போட்டு உள்ளார் எனத் தெரியவந்தது. தொடர்ந்து பல பெண்களை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்து வருகிறார். மேலும் இவர் மீது மூன்று சீட்டு லாட்டரி விற்பனை சம்பந்தமாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது.  இந்த புகார் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.