Skip to main content

மகளிர் குழுக்களிடம் பணம் கையாடல்; இருவர் கைது

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

kallakurichi sankarapuram microfinance collection amount incident 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மதுரா மைக்ரோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் கடந்த ஐந்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இந்த நிறுவனம் குறைந்த வட்டியில் வாரக்கடன் மற்றும் மாதக்கடன் கொடுத்து அதை வசூலித்து வருகிறது.

 

இந்நிறுவனத்தில் துணை மேலாளராக சங்கராபுரம் அருகே உள்ள மரூர் கிராமத்தைச் சார்ந்த கண்ணுசாமி மகன் ஐயப்பனும், மக்கள் தொடர்பு பணியாளர்களாக தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த  குழந்தைவேல் மகன் தினேஷ் மற்றும் மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அய்யப்பன் ஆகியோரும் பணியாற்றி வந்துள்ளனர். மகளிர் சுயஉதவிக் குழு பெண்களிடம் அந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட கடன்தொகையை கிராமங்களுக்கு சென்று வசூல் செய்து அந்தப் பணத்தை அந்த நிறுவனத்தில் செலுத்தி வந்தனர்.

 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுமார் 40க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த சுமார் 17 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை நிறுவனத்தில் செலுத்தாமல் பணத்தை கையாடல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக சங்கராபுரம் காவல்நிலையத்தில் நிறுவனத்தின் கிளை மேலாளர் அய்யனார் கொடுத்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியோடு இந்தியாவில் ஏழு மாநிலங்களில் 15 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், மேற்படி நிறுவனம் மகளிரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் குடும்ப வருமானத்தைப் பெருக்கவும், பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடனாக நிதி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

மகளிர் குழுக்கள் திரும்ப செலுத்தும் நிதியை வாரத்திற்கு ஒருமுறை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, மாதம் ஒரு முறை என்று பணியாளர்கள் மூலம் வசூலித்து வந்ததாகவும், சில மாதங்களாக உறுப்பினர்களிடமிருந்து மகளிர் குழுவிலுள்ள பெண்கள் கட்டிய பணத்தை நிர்வாகத்திடம் செலுத்தாமல் நிலுவை காட்டுவதாகவும் வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வந்ததையடுத்து அந்த நிறுவனம் தணிக்கை குழுவை வைத்து தணிக்கை செய்த போது நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி ஐயப்பன், தினேஷ், அய்யப்பன் ஆகிய மூவரும் நிறுவனத்தில் செலுத்த வேண்டிய சுமார் 17 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சங்கராபுரம் காவல்துறையினர் இந்த புகாரை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஐயப்பன், தினேஷ், அய்யப்பன் ஆகிய மூன்று நபர்களும் 17 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்தது உறுதியானது.

 

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூன்று குற்றவாளிகளையும் தேடி வந்த நிலையில், இன்று சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் மரூர் ஐயப்பனையும், சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தேவபாண்டலம் தினேஷையும் கைது செய்து சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூக்கனூர் ஐயப்பனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.