Skip to main content

நள்ளிரவில் பற்றியெரிந்த வீடு; தாத்தாவைக் காப்பாற்றப் போராடிய பேத்தி!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

An old man trapped in a burning roof house,Granddaughter who woke up

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது நாகல் குழி. இந்த ஊரைச் சேர்ந்தவர் 70 வயது பெரியான். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இவர் தனக்குத் துணையாக அவரது பத்து வயது பேத்தி நீரோஷாவுடன் வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு அவரது குடிசை வீட்டில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

நடு இரவு ஒரு மணி அளவில் அவர்களது கூரை வீடு திடீரென்று தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. தீயின் தாக்கத்தினால் திடுக்கிட்டு எழுந்த நிரோஷா தனது தாத்தாவை தீயிலிருந்து காப்பாற்றுவதற்காக எழுப்பியுள்ளார். உடல்நிலை சரியில்லாத பெரியான், வீட்டிற்கு வெளியே வர முடியாமல் தடுமாறி உள்ளார். உடனே நிரோஷா தாத்தாவை வீட்டை விட்டு வெளியே அழைத்து வருவதற்கு, உதவி செய்வதற்காக பக்கத்துத் தெருவில் குடியிருந்த தனது பெற்றோர் வீட்டுக்கு ஓடி அவர்களிடம் தகவல் கூறி அழைத்து வந்துள்ளார்.

 

அதற்குள் அந்த வீடு முழுவதும் தீப்பற்றி திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் சங்கராபுரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எரிந்த வீட்டில் முதியோர் பெரியாரின் உடலை சடலமாகக் கண்டெடுத்தனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முதியவர் பெரியான் தீயில் சிக்கி இறந்து போனார். இதுகுறித்து தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் முதியவர் பெரியானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போலீசாரின் விசாரணையில் மின்கசிவு காரணமாக அந்த வீடு இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது எனக் கண்டறிந்துள்ளனர். இது குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்த வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்த பெரியவர் ஒருவர், தீயில் சிக்கி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.