Skip to main content

உயிரோடு இருந்தவரை இறந்ததாகக் கூறிய மருத்துவ ஊழியர்களால் பரபரப்பு!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

kallakurichi incident at government hospital


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தற்போது வரை 9,097 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 95 பேர் இறந்துள்ளனர். மற்ற அனைவரும் குணமடைந்துள்ளனர். தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 35 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில்  தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த  56 வயது மனோ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சாதாரண ஜுரம், உடல் வலி என்பதற்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 


இந்த நிலையில் மனோ, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துவிட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மனோ உடலை தொட்டியத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கிருந்த அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் வந்த உடலை திறந்து பார்த்துள்ளனர். எல்லோருக்கும் அதிர்ச்சி, காரணம் அந்த உடல் மனோவின் உடல் இல்லை என்று தெறியவந்தது. இந்தத் தகவல் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது. 


அவரது உடலை ஊருக்கு எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மீண்டும் அந்த உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு திரும்பி எடுத்துவந்தனர். அதையடுத்து, அரசு மருத்துவமனை டாக்டர்கள் தீவிர விசாரணை செய்ததில், மனோ உயிரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்தது.

 

முன்னர், மனோ சிகிச்சையில் இருந்த அதே வார்டில், வேறு நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 52 வயது ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் திடீரென்று இறந்துபோய் உள்ளார். இதில், குழப்பமடைந்த ஊழியர்கள், இறந்தது மனோதான் என்று முடிவு செய்துவிட்டனர். காரணம் அவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து பெட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதனால், இந்த இருவரின் மருத்துவ அறிக்கையும் இடம் மாறிவிட்டது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் இறந்தது மனோ என்று முடிவு செய்து உள்ளனர் என்பதும் தெரியவந்தது. 

 

இதனால், ஏற்பட்ட குழப்பத்தினால் உயிரோடு இருந்த தொட்டியம் மனோ இறந்து போனதாகக் கூறிவிட்டனர். இதன்பிறகு திருக்கோவிலூர் ராமன் உடலை மீண்டும் ஆம்புலன்சில் ஏற்றி திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுபோய் ஒப்படைத்துள்ளனர். இந்தக் குழப்பத்தின் காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணியின்போது கவனக் குறைவாக இருந்த டாக்டர்கள் சரஸ்வதி, சரவணன் மற்றும் 5 செவிலியர்கள் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவப் பணிகள் மாவட்ட இணை இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Resign the post and let politics talk  E.P.S. Emphasis

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசுகையில், “சட்டப்பேரவை விதி 56இன் கீழ் பேரவையின் பிற நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக காலையே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை அளித்தோம். விதிப்படி வந்தால் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசலாம் என பேரவைத் தலைவர் சொன்னார். இருப்பினும். விதியை பின்பற்றி பேசினாலும் சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி தர மறுக்கிறார். சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை. பிரச்னையின் ஆழத்தை கருதி சபாநாயகர் அப்பாவு நேரம் கொடுத்திருக்க வேண்டும். 

Resign the post and let politics talk  E.P.S. Emphasis

கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது வேதனை அளிக்கிறது. கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து அவையில் எதிர்க்கட்சி பேசுவதை ஆளும்கட்சி விரும்பவில்லை. கள்ளக்குறிச்சி பிரச்னையை விட முக்கியமான பிரச்னை வேறு என்ன இருக்கிறது?. சட்டப்பேரவையில் ஒரே நாளில் 5 மானியக் கோரிக்கை மீது எப்படி விவாதம் நடத்த முடியும்?. சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்காக வெளியேறினோம் என சபாநாயகர் கூறுவது தவறு. மக்கள் பிரச்னைகளை மூடி மறைக்கவே சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு எனக் கூறுகின்றனர்.

கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார். எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம் என செயல்படுகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திமுக அரசு பேச வாக்கு அரசியல் தான் காரணம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக்கூடாது. வேண்டுமென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Counterfeiting issue; Increase in the number of victims

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏசுதாஸ் (வயது 39) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் குமார் (வயது 37) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.