Skip to main content

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தற்கொலை!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

kallakurichi district collector personal assistant incident police investigation

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியராக கிரன் குராலா பணியாற்றி வருகிறார். இவருடைய நேர்முக உதவியாளராக சிவபாலன் (வயது 40) பணியாற்றி வந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவியும், அருளானந்தம் என்ற 18 வயது மகனும் உள்ளனர். இவர்களது மகன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு சம்பந்தமாகப் படித்து வருகிறார். இவருக்கு துணையாக சிவபாலன் மனைவி லலிதா சென்னையில் தங்கியுள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் (07/04/2021) காலை சென்னையில் இருந்தபடி தனது கணவர் சிவபாலனுக்கு அவரது மனைவி லலிதா ஃபோன் செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் ஃபோன் எடுக்கவில்லை. இதையடுத்து, சிவபாலனின் நண்பர் பூபதி என்பவருக்கு தொடர்பு கொண்டு எனது கணவருக்கு பலமுறை ஃபோன் செய்தும் எடுக்கவில்லை. அது சம்பந்தமாக நேரில் எங்கள் வீட்டுக்குச் சென்று விசாரித்து பதில் கூறுமாறு தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பூபதி, சிவபாலன் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கதவு மட்டும் திறந்து இருந்த நிலையில், வீட்டிற்குள் சிவபாலன்  மின்விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிய வந்துள்ளது.

 

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவபாலனின் நண்பர் பூபதி லலிதாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிவபாலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிவபாலனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

சிவபாலன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்ன காரணம்? என்பது குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.