Skip to main content

முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் கொலை; சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

kallakurichi college student incident minor boy involved

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர், தமிழ்ச்செல்வி தம்பதியர். தமிழ்ச்செல்வி அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவியில் உள்ளார். இவரது மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19). இவர் வேப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெகன் ஸ்ரீ இரவு அதிக நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. ஜெகன் ஸ்ரீயை பல்வேறு இடங்களுக்கும் உறவினரின் வீடுகளுக்கும் சென்று தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை ஜெய்சங்கர் வரஞ்சரம் காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே ஊரைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 32), அபிலரசன் (வயது 25), ஆகாஷ் (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெகன் ஸ்ரீயை அப்பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் கொலை செய்து புதைத்து விட்டதாகத் தெரிவித்தனர்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த கார்த்திகை தீபத்தின் போது ஊரில் திருவிழா நடந்தது. அப்போது ஐயப்பன், ஜெகன் ஸ்ரீ ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெகன் ஸ்ரீ ஐயப்பனை பலர் முன்னிலையில் அடித்துள்ளார். தன்னை விட வயதில் சிறியவன் தன்னை பலர் முன்னிலையில் அடித்ததை ஐயப்பன் பெருத்த அவமானமாகக் கருதியுள்ளார். இதற்காக ஜெகன் ஸ்ரீயை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய ஐயப்பன் ஜெகன் ஸ்ரீ மீது விரோதத்தில் இருந்த இளைஞர்களை ஒன்றிணைத்து, கள்ளக்குறிச்சிக்கு சென்று மது பாட்டில்கள், கொலை செய்வதற்கான கத்தி போன்ற ஆயுதங்களை வாங்கி வந்துள்ளனர்.

 

இதையடுத்து முன்விரோதத்தை வெளிக்காட்டாமல் ஜெகன் ஸ்ரீயை மது குடிக்க வருமாறு அழைத்துள்ளனர். அவரும் பகையை மறந்து அவர்களுடன் காப்புக்காடு வனப்பகுதிக்கு மது குடிக்கச் சென்றுள்ளார். அளவுக்கதிகமான மதுவை ஜெகன் ஸ்ரீயை குடிக்க செய்து அவர் நிலைதடுமாறி தள்ளாடிய நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட நால்வரும் பீர் பாட்டிலால் ஜெகன் ஸ்ரீ தலையில் அடித்தும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். அவர் உடலில் உயிர் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதே இடத்தில் குழி தோண்டி உடலை புதைத்தனர். இதை ஐயப்பன் தலைமையிலான நால்வரும் போலீசாரிடம் வாக்குமூலம் ஆக அளித்துள்ளனர்.

 

இதையடுத்து அவர்கள் நால்வரையும் அழைத்துச் சென்று காப்புக்காட்டில் ஜெகன் ஸ்ரீ புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டச் சொல்லி, அந்த இடத்தில் தோண்டி உடலை வெளியே எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்த வரஞ்சரம் உதவி காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் குற்றவாளிகள் நால்வரையும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பெயரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். திருவிழா தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லூரி மாணவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.