Skip to main content

தொடர்ந்து போராடுகிறார் கலைஞர்...! -ஈரோட்டில் கலைஞர் சிலைதிறப்பு விழாவில்  மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருனாநிதியின் முழு உருவ வெண்கல சிலை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா முகப்பில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசும் போது,

தலைவர் கலைஞர் மறைந்து ஓராண்டு கடந்தும் தொடர்ந்து தமிழகம் முழுக்க தலைவர் கலைஞருக்கு புகழஞ்சலி கூட்டங்கள் கலைஞர் சிலை திறப்பு விழா என நடந்து வருகிறது. கலைஞர் பிறந்ததிலிருந்து தொடர்ந்து போராட்டத்தையே  சந்தித்து வந்தார் அவர்மறைவுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையோரம் பேரறிஞர் அண்ணாவின் அருகே துயில் கொள்ள விரும்பினார். தலைவர் இறந்த பிறகு  அங்கு இடமில்லை என இந்த அரசு கூறிய போதிலும் நீதிமன்றத்திலே போராடி அந்த இடத்தை பெற்றோம். இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம் என அவரது போராட்ட பாதை தொடர்ந்தது.  இந்த ஈரோட்டில் கூட பன்னீர்செல்வம் பூங்கா முகப்பில் தலைவர் கலைஞர் சிலையை அமைக்க மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

 

 The kalaingar who constantly struggles ... MK Stalin talks about opening the statue in Erode


ஏற்கனவே தலைவர் கலைஞர் இறந்த பிறகு அவருக்கு முதலாவது சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைத்தோம். இரண்டாவது சிலை கலைஞரின் குருகுலமான ஈரோட்டில் அமைக்க முடிவு செய்தது இந்த பன்னீர்செல்வம் பூங்காவில் அனுமதி கேட்டபோது கிடைக்கவில்லை ஆகவே ஈரோட்டில்  திமுகவிற்கு சொந்தமான ஒரு இடத்தில் தலைவர் கலைஞரின் சிலையை சென்ற வருடம் இதே ஈரோட்டில் நான் திறந்து வைத்தேன். ஆனாலும் இந்த பன்னீர்செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் பேரறிஞர், அண்ணா ஆகியோரின் சிலைக்கு அருகே கலைஞரின் சிலை அமைய வேண்டுமென ஒட்டுமொத்த திமுகவினரின் விருப்பமாக இருந்தது.

இந்தநிலையில் இந்த அரசு இங்கு சிலை வைக்க அனுமதி கொடுக்கவில்லை இருப்பினும் மீண்டும் நீதிமன்றத்தை நாடி போராடியபோது இந்த அரசு இப்போது அனுமதி கொடுத்தது. ஆக கலைஞர் இறந்த பிறகும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார். அவரது லட்சியங்கள் அவரது கொள்கைகளை திமுக என்றென்றும் முன்னெடுத்துச் செல்லும் தமிழ்மக்களுக்காக என்றென்றும் பாடுபடும் " என்றார் முக ஸ்டாலின்.

 

 The kalaingar who constantly struggles ... MK Stalin talks about opening the statue in Erode


கலைஞருடைய வாழ்க்கையே போராட்டம்தான். அவர் மாணவர் பருவத்தில் இருந்த பொழுது ஒரு பள்ளிக்கூடத்தில் சேரவேண்டும் என்பதற்காக சென்ற பொழுது அந்த பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள் உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியாது. நீ சீர்திருத்தவாதி, சுயமரியாதைக்காரன். இந்த பள்ளிக்கூடத்தில் இருக்கின்ற  குழந்தைகளை எல்லாம் நீ கெடுத்துவிடுவாய். சீர்திருத்தக் கொள்கைகளை, சுயமரியாதைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லி இங்கு இருக்கின்ற மாணவர்களைக் கெடுத்து விடுவாய். உனக்கு இடம் கிடையாது என்ற திருவாரூரில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் கூறினர்.

 

 The kalaingar who constantly struggles ... MK Stalin talks about opening the statue in Erode


அந்தப் பள்ளிக்கூடத்திற்கு நேரெதிரே இருக்கக்கூடிய கமலாலயம் குளத்திற்கு மேல் வந்து நின்று கொண்டு இந்த பள்ளியில் சேர்க்கவில்லை என்று சொன்னால் இந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன், இறந்துவிடுவேன் என கலைஞர் ஒரு போராட்டத்தை நடத்தினார். அதன் பிறகு பள்ளி நிர்வாகம் கலைஞரின் போராட்டத்தை பார்த்து அஞ்சி நடுங்கி அந்த காரியத்தை மட்டும் செய்து விடாதே உன்னை உடனே பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்கிறோம் என பள்ளிகூடத்தில் சேர்த்துக் கொண்டார்கள். பள்ளிக்கூடத்தில் சேருவதற்குகூட போராட்டத்தை நடத்தியவர் நமது கலைஞர் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.