Skip to main content

புயல் நிவாரண அரிசி மூட்டைகளை புதைத்து வைத்த அதிகாரிகள்… போராட்டத்தில் குதித்த மக்கள்!

Published on 28/11/2019 | Edited on 29/11/2019

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க அரிசி, உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அங்குள்ள கிராம சேவை மையத்தில் அதிகாரிகள் இறக்கி வைத்து வழங்கினார்கள். சில நாட்களில் பொருட்கள் முடிந்துவிட்டது. மறுபடியும் வரும் போது தரப்படும் என்று சொல்லி மையத்தை பூட்டி வைத்தனர். ஒரு வருடம் முடிந்துவிட்டது.

kajacyclone pudukkottai district rice bundled  peoples strike


இந்த நிலையில் இன்று (28.11.2019) வியாழக்கிழமை கிராம சேவை மையத்தின் பின்பக்கம் இருந்து துர்நாற்றம் வர அங்கு சென்ற இளைஞர்கள் மூட்டைகள் புதைக்கப்பட்டிருந்ததை பார்த்து வெளியே எடுத்த போது எல்லாம் நிவாரண அரிசி மூட்டைகள். சுமார் 30 மூட்டைகள் வரை வெளியே எடுத்து போட்டனர். அப்போது அங்கு வந்த கிராம உதவியாளர் அவசரமாக அந்த மூட்டைகளை மீண்டும் கிராம சேவை மையத்திற்குள் எடுத்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
 

kajacyclone pudukkottai district rice bundled  peoples strike

அங்கு கூடிய மக்கள் இளைஞர்களுடன் சேர்ந்து மீண்டும் தோண்டிய போது மேலும் அரிசி மூட்டைகள் வெளியே வந்தது. சுமார் 50 மூட்டைகளுக்கு மேல் ஏழை மக்களுக்கு வழங்கி வேண்டிய அரிசி மூட்டைகள் கெட்டுப் போய் புதைக்கப்பட்டு துர்நாற்றம் வீசியது.

kajacyclone pudukkottai district rice bundled  peoples strike


இது சம்மந்தமாக அதிகாரிகள் வருவார்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் ஏமாந்தனர். அதன் பிறகு கிராம மக்கள் அதிகமாக திரண்டுவிட்டதால் இந்திரா காந்தி சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் வரவில்லை. மேலும் கிராம சேவை மையத்தில் நிவாரணப் பொருட்கள், தார்பாய் போன்றவை இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் அதிகாரிகள் வந்து புதைத்த அசிரிக்கு பதில் சொல்வதுடன் கிராம சேவை மையத்தையும் திறந்து காட்ட வேண்டும். அரிசியை புதைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளையும் எழுப்பினார்கள்.
 

kajacyclone pudukkottai district rice bundled  peoples strike


அதே போல நாகுடி கிராம சேவை மையத்திலும் தார்பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஒரு வருடமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றையும் திறக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். ஏழை மக்கள் சாப்பிடும் அரிசியை கூட அவர்களுக்கு கொடுக்காமல் பதுக்கி வைத்து கெட வைத்து புதைத்த அதிகாரிகளை என்ன சொல்வது..

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'விண்ணை முட்டும் அரிசி விலை'-ராமதாஸ் கண்டனம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
'Skyrocketing rice prices' - Ramadoss condemned

'விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை' என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரிசி விலை வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகரிக்கும். சம்பா/தாளடி அறுவடைப் பருவமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை பெருமளவில் குறையும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இப்போது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை அதிகரித்து உள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.1450 லிருந்து ரூ1600 ஆகவும், 62 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை 1350 ரூபாயிலிருந்து ரூ.1720 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோவுக்கு குறைந்தபட்சம் 6 ரூபாயிலிருந்து 8 ரூபாய்  வரை அரிசி விலை அதிகரித்திருக்கிறது. இந்த விலை உயர்வு இன்னும் தொடரும் என்று தெரிகிறது.

மிக்ஜம் புயல் காலத்தில் பெய்த மழையால் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்தது, காவிரி பாசன மாவட்டங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால்  2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் முழுமையாகவும், ஒன்றரை லட்சம் ஏக்கரில் பகுதியாகவும்  கருகியதால் விளைச்சல் குறைந்தது ஆகியவை தான் முதன்மைக் காரணங்களாக கூறப்படுகின்றன.

தென்னிந்தியாவில் அதிக அளவில் நெல் விளையும் மாநிலங்களான ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் கூட போதிய அளவில் நெல் விளைச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், அம்மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லை ரூ.3,000 வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதுவும் அரிசி விலை உயர்வுக்கு காரணம். இவை தவிர  அரிசி ஆலைகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது மூன்றாவது காரணமாக கூறப்படுகிறது.

நெல் மூட்டைகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் அரிசியின்  விலை கிலோவுக்கு ரூ.12 வரை அதிகரிக்கக்கூடும் என்றும், ஒரு கிலோ பொன்னி, பாபட்லா ரக அரிசியின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த வகை அரிசி கிலோ ரூ.48 முதல் ரூ.50க்கு தான் விற்கப்பட்டது. இவற்றின் விலை 50% வரை அதிகரித்து 75 ரூபாயை எட்டும் என்பது நியாயப்படுத்த முடியாததாகும்.

ஒருபுறம் அரிசி விலை உயர்ந்தால் இன்னொருபுறம் பருப்பு விலைகளும், பிற மளிகை சாமான்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அதனால், தமிழ்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது, அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை அதிகரித்திருப்பது இந்தக் குழுவுக்கு தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு  இதுவரை தும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.

அரிசி விலை உயர்வுக்கான காரணம் அதன் பற்றாக்குறை தான் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைக்கச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய வேண்டும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரிசி விலை குறைவாக இல்லை என்றால், சன்னரக அரிசியை நியாய விலைக்கடைகள் மூலம் மானிய விலையில் விற்க  அரசு முன்வர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.