Skip to main content

கஞ்சா வியாபாரத்தை தடுக்க இரு மாநில போலீஸார் கூட்டு நடவடிக்கை

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

Joint operation by police of two states to stop the business of cannabis

 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை ஆகியவற்றை தடுக்கும் விதமாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் சுமார் 2,200 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அது போல் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா மற்றும் குட்கா புகையிலையை அதிகாரிகள் தீயிட்டு எரித்து அழித்துள்ளனா்.

 

இந்த நிலையில், கஞ்சா ஆசாமிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களை குறித்து வைத்து சப்ளை செய்து வருவதை கண்டறிந்துள்ள குமரி  மாவட்ட போலீசார் எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் தலைமையில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கஞ்சா மற்றும் குட்காவை ஓழிக்கும் விதமாகவும் மாணவா்கள் அதற்கு அடிமையாவதை தடுக்கும் விதமாகவும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். 

 

இதே போல் ஒவ்வொரு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து சல்லடை போட்டு கஞ்சா மற்றும் குட்கா விற்பவா்களை தேடி வருகின்றனா். மேலும் 7010363173 என்ற செல்போன் எண்ணை பொது மக்களிடம் அறிமுகம் படுத்தி, ‘உங்கள் ஊா் மற்றும் பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா விற்பவா்கள் குறித்து தகவல் தெரிவியுங்கள்’ என மாவட்ட காவல்துறை கேட்டுள்ளது. 

 

அது போல் ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்களில் போதை விழிப்புணா்வு ஸ்டிக்கரும் ஒட்டி மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் கொரியா் பார்சல் மூலம் கஞ்சா வருவதை தடுக்கும் விதமாக அனைத்து கொரியா் நிறுவனங்களுக்கும் மாவட்ட காவல்துறை மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் தலைமையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கும் கஞ்சா மறறும் குட்கா புகையிலை கொண்டு செல்வதையும் விற்பனை செய்வதையும் தடுக்கும் விதமாக திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி.ஷில்பா தியா மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் குமரி - கேரளா எல்லையான களியக்காவிளையில் பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணா்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

 

இதில் ஆட்டோ மற்றும் வாகன ஓட்டிக்கள், கடை வியாபாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுப்பது விதமாக காவல்துறைக்கு தகவல் மற்றும் ஒத்துழைப்பு தருவது சம்மந்தமாக விழிப்புணா்வை ஏற்படுத்தினார்கள். மேலும் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட இரு மாநில போலீசாரிடமும் அறிவுறுத்தப்பட்டது. 

 

இரு மாநில போலீசாரின் இந்த கூட்டு நடவடிக்கையால் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரம் செய்யும் குற்றவாளிகளை தடுத்து விடலாம் என நம்புகின்றனா் பொது மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.