Skip to main content

'பெண்' விஷயத்தில்  கறாரானவர் டிஜிபி திரிபாதி.!

Published on 29/06/2019 | Edited on 29/06/2019


2011-ல் சென்னை சிட்டி கமிஷ்னராக இருந்தவர் திரிபாதி. அப்போது நடந்த சம்பவத்தை இப்போது நினைவு கூர்ந்தார் காக்கி நண்பர்.   "அந்த வருடம் டிசம்பர் 24-ந்தேதி நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்றது. விடிந்தால் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் தேவாலயங்கள் எல்லாம் மின்னொளியில் ஜொலித்தன. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தன.

 

tb

 

காவல் ஆணையராக இருந்த திரிபாதி, சைரன் இல்லாத காரில் சாதரண உடையில் உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டார். சாந்தோம் தேவாலயத்தை தாண்டி செல்லும்போது, சாலையோரம் நின்றிருந்த ஒரு பெண், திடீரென கமிஷ்னரின் காரை நோக்கி கையை நீட்டி நிறுத்துமாறு சைகை காட்டி உள்ளார். 

 

தேவாலயத்திற்கு வந்துவிட்டு வீட்டிற்கு செல்ல பேருந்து இல்லாததால் லிப்ட் கேட்கிறாரோ? என்ற சந்தேகத்தில் காரை நிறுத்தச் சொன்ன திரிபாதி, எங்கே போகனும்? என்று அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

 

'உங்கள் இஷ்டம் நீங்கள் எங்க கூப்பிடுகிறீர்களோ? அங்கே வர நான் ரெடி'என்றிருக்கிறார் அந்த பெண். 

அப்போது தான், கமிஷனருடன் இருந்த 'கன்மேனு'க்கு புரிந்து விட்டது. பார்ட்டி 'அந்த' மாதிரி பெண் என்று. அவர் கமிஷ்னரிடம் விவரத்தை சொல்ல வெலவெலத்துப் போனார் கமிஷ்னர். உடனடியாக அந்த ஏரியாவின் (மயிலாப்பூர்) இன்ஸ்பெக்டரை மைக்கில் கூப்பிட்ட கமிஷ்னர் சம்பவ இடத்திற்கு வரவைத்து அந்த பெண்ணை ஒப்படைத்துள்ளார்.

 

அந்த நேரத்தில் காப்பகத்திலும் அந்த பெண்ணை ஒப்படைக்க முடியாது. லாக்கப்பிலும் இரவில் பெண்ணை வைக்க கூடாது. எனவே, காவல் நிலையத்தின் ஒரு அறையில் தங்க வைக்கவும், அப்போது மகளிர் போலீஸ் ஒருவரை துணைக்கு வைக்கவும் உத்தரவிட்டு" சென்றார். மறுநாள் அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

 

அந்த அளவுக்கு கறாராக நடந்து கொள்வதோடு, மனிதாபிமானத்தோடும் நடந்து கொள்வார் திரிபி. ஏனெனில் காவல்துறையில் உள்ள சக அதிகாரிகள் அவரை 'திரிபி' என்றே செல்லமாக அழைப்பர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்’ - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
13 IPS officers transferred TN govt action

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.யாக உள்ள தேன்மொழி, தமிழக போலீஸ் அகாடமிக்கு ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக், பதவி உயர்வில் திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையராக இருந்த ரோஹித் நாதன் ராஜகோபால் கோவை நகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பதவி உயர்வில் கோவை நகர வடக்குப் பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஏ.எஸ்.பி. விவேகானந்தா சுக்லா பதவி உயர்வில் திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரி பதவி உயர்வில் மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வி. அன்பு சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராகவும், எஸ். வனிதா மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டி. ரமேஷ்பாபு நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும், எஸ்.எஸ். மகேஸ்வரன் சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராகவும், மதுரை நகர் துணை ஆணையர் பாலாஜி காவலர் நலத்துறையின் ஏ.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் கடலோர காவல்படை எஸ்.பி. ஆதி வீரபாண்டியன் சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மதுரை, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Madurai, Sivagangai Police S.P. Transferred!

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.