Skip to main content

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகை திருட்டு; நூதன முறையில் மீட்ட போலீசார்; கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஊழியர்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Jewelry theft at a primary health facility; The police recovered the jewel in a sophisticated manner; A tearful thank you employee

 

சென்னை எழும்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளரிடம் 5 சவரன் நகை திருடப்பட்ட நிலையில் போலீசார் நூதன யுக்தியைக் கையாண்டு நகையை மீட்டனர். மேலும் நகை மீட்கப்பட்டதற்கு அலுவலக உதவியாளர் தரையில் மண்டியிட்டு கண்ணீருடன் போலீசாருக்கு நன்றி சொல்லியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

எழும்பூரில் உள்ள புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் அலுவலக உதவியாளராக உஷா என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 17ஆம் தேதி வழக்கம்போல பணியை முடித்துவிட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்தார் உஷா. அடுத்த நாள் காலை எழுந்து பார்க்கையில் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க தாலியைக் காணவில்லை. இதனால் அதிர்ந்து போன உஷா உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தார். நகை திருட்டு தொடர்பாக எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஒருவரே அந்த நகையைத் திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனை மெய்ப்பிப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற காவல்துறையினர் ஒரு நூதன யுக்தியை செயல்படுத்தினர்.

 

Jewelry theft at a primary health facility; The police recovered the jewel in a sophisticated manner; A tearful thank you employee

 

அனைத்து ஊழியர்களையும் கூப்பிட்டு உஷாவின் நகையைத் திருடியது யார் என்பதை நாங்கள் கண்டறிந்துவிட்டோம். நாங்கள் ஒரு தனி அறையை ஒதுக்கி உள்ளோம் அந்த அறையில் பை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் அந்த அறைக்குச் சென்றுவிட்டு வர வேண்டும். நகையை எடுத்தவர் அந்த நகையைப் பையில் வைத்துவிட வேண்டும். அப்படி நீங்கள் வைக்கவில்லை என்றால் நாங்களாகவே உங்களைக் கைது செய்து சிறையில் அடைப்போம் என எச்சரித்தனர். அதன்படியே ஊழியர்கள் அனைவரும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு ஒவ்வொருவராக அறைக்கு  அனுப்பப்பட்டனர். பின்னர் இறுதியில் அந்தப் பையில் நகை இருந்தது. நகை கிடைத்துவிட்டது எனப் போலீசார் உஷாவுக்கு தெரிவித்த நிலையில், மகிழ்ச்சியடைந்த உஷா தன்னை மறந்து தரையில் விழுந்து போலீசாருக்கு அழுது கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.