Skip to main content

கத்தி முனையில் மிரட்டல்; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

Jewel robbery by threatening to put a knife to the child's neck

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீட்டுக்குள் புகுந்து  ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் அப்பகுதியில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி. இந்த தம்பதிக்கு, 7 வயதில் ரித்தீஷ் என்கிற மகனும், ஒன்றரை வயதில் சாதனா என்கிற மகளும் இருக்கின்றனர். சங்கர் கணேஷ், சென்னையில் பணியாற்றி வரும் நிலையில், மனைவி ராமலட்சுமி தன் குழந்தைகளுடன் கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

 

கடந்த சனிக்கிழமை இரவு, ராமலட்சுமி வழக்கம் போல் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு, தன் குழந்தைகளுடன் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அப்போது, அந்த நள்ளிரவு நேரத்தில், கதவை திறக்கும் சத்தம் கேட்ட ராமலட்சுமி, திடீரென விழித்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த பீரோவை உடைக்க முயற்சித்து கொண்டிருந்தனர்.

 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராமலட்சுமி கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த கொள்ளையர்கள், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில்  கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து, அவரிடமிருந்து 3.5 பவுன் தங்கநகை மற்றும் 5 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

 

அந்த சமயத்தில், என்ன செய்வது என தெரியாமல் இருந்த ராமலட்சுமி, பின்னர் ஊர்மக்களை அழைத்துக்கொண்டு சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராமலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள், விளாத்திகுளம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.