Skip to main content

ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு; சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Jayakumar danasingh case CBCID investigation begins

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் பலரிடமும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இன்று (23.05.2024) காலை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவைத் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்திருந்தார். 

Jayakumar danasingh case CBCID investigation begins

மேலும் சிபிசிஐடி ஆய்வாளர் உலகராணி இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி வசம் வழக்கு மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. அச்சமயத்தில் காவல்துறை கொடுத்த வழக்கு தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக கரைச்சுத்து புதூரில் உள்ள அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதோடு ஜெயக்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்திலும் விசாராணையை மேற்கொண்டனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராயத்தில் கலந்திருந்தது மெத்தனால் மட்டுமல்ல - அதிர்ச்சியூட்டும் புது தகவல்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
 It is not just methanol that was mixed in fake liquor - new information

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதான மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கெனவே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 It is not just methanol that was mixed in fake liquor - new information

இந்தச் சம்பவத்தில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்ததால் விஷத் தன்மை ஏற்பட்டது தொடர்பான தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில் மெத்தனால் மட்டுமல்லாது டர்பைன்டைன் ஆயிலும் கலக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனால் வாங்கிய நிலையில் அவரிடம் இருந்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் மெத்தனாலை வாங்கி கள்ளச்சாராயத்தில் பயன்படுத்தியது தெரிய வந்திருந்தது. இந்தநிலையில் புதுச்சேரியிலும் மெத்தனால் விற்பனை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

nn

மாதேஷ் சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ஆன்லைன் மூலமாக மெத்தில் டர்பன்டைன் ஆயில் என்கின்ற வேதிப்பொருளை 10 கேன்களில் வரவழைத்திருக்கிறார். அந்தக் கேன்கள் விருத்தாசலத்தில் உள்ள ஒரு செராமிக் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அந்த நிறுவனம் ஜோதி என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. அதில் இரு கேன்களை மாதேஷ் பெற்றுக் கொண்டதாகவும், சின்னதுரைக்கு அந்தக் கேன்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கள்ளச்சாராயத்தில் டர்பன்டைன் ஆயில் கலக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜோதி மற்றும் கேசவன் என்ற இருவரைப் பிடித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Forgery issue A case has been registered against 3 people 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதான மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Forgery issue A case has been registered against 3 people 

ஏற்கெனவே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கச்சிராப்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.