Skip to main content

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தலைமைக் காவலரை தாக்கினேனா?  -’ஜல்லிக்கட்டு’ஜூலி விளக்கம்

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலி பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலி தற்போது அம்மன் தாய் என்ற படத்தில் நடிகையாக நடித்து வருகிறார்.  இதே தருணத்தில் பல சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் ஜூலி, கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தலைமைக் காவலரை தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்.

 

j

 

கடந்த மார்ச் பதினோராம் தேதி இரவு ஒன்பது முப்பது மணி அளவில் சென்னை வேப்பேரி டவுட்டன் சாலையில் ஒரு சொகுசு கார் நீண்ட நேரமாக போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தது. அதேவேளையில் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் பூபதி பணியை முடித்துவிட்டு அவ்வழியே வீடு திரும்பியுள்ளார்.    அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அந்த சொகுசு காரை எடுக்கும்படி அதில் இருந்தவர்களிடம் அவர் கூறியுள்ளார்.  அதற்கு அந்த காரில் இருந்த நபர் காவலர் பூபதியை பார்த்து நீ யார் இதை கேட்க உன் வேலையை பார்த்து செல் என்று கூறியுள்ளார்.

 


உடனே,  தலைமை காவலர் பூபதி முதலில் நீ யார்? ஏன் இங்கு இடையூறாக சாலையில் காரை நிறுத்தியுள்ளாய்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு காரில் இருந்த நபர், நான் யார் தெரியுமா? என் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா? என்னையே காரை எடுக்க சொல்றியா?  என்று சத்தம் போடவே,  அந்த காரில் இருந்த பெண்ணிடம் தலைமை காவலர்,  அம்மா இந்த காரை எடுக்கச் சொல்லுங்கள்.  தேவையில்லாத வாதம் வேண்டாம் என்று கூறியதற்கு,  உடனே அந்த பெண்,  நான் யார் தெரியுமா என்று கேட்கவும்,   நீ யாராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று தலைமை காவலர் கூறியுள்ளார்.

 

 என்னையே தெரியாதா? நான்தான் தமிழ் நாட்டையே கலக்கிய ஜல்லிக்கட்டு, பிக் பாஸ் ஜூலி.  என்னை பார் என்று ஆணவமாக பேசியிருக்கிறார்.  அதற்கு தலைமை காவலர் நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிற காரை அகற்ற வேண்டும் என்று தான் கூறினேன் என சொன்னதற்கு,  ஜூலியுடன் வந்த ஆண் நண்பர் பிரசாந்த் என்பவரும் அவருடன் வந்திருந்த வேறு இரு நபர்களும் தலைமை காவலர் பூபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வாக்குவாதம் முற்றி ஜூலியின் ஆண் நண்பர்கள் தலைமை காவலர் பூபதியை தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் அவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல ஜூலி தரப்பினரும் காவலர் மீது அதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.   காவலர் என்று தெரிந்தும் காவலரை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது தலைமை காவலர் பூபதி தரப்பு.   

 

சம்பவம் தொடர்பாக நடிகை ஜூலி நக்கீரனுக்கு  அளித்த விளக்கம்:
கடந்த திங்கட்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் சம்பந்தமும் இல்லை என்று நடிகை ஜூலி நக்கீரனுக்கு விளக்கம் அளித்தார்.  அவர் மேலும்,  ‘’ சம்பவம் நடந்த திங்கட்கிழமை இரவு பட வாய்ப்பு தொடர்பாக ஒரு பிரபல இயக்குனரை சந்தித்துவிட்டு நண்பருடன் வந்தேன்.  வீட்டுக்கு செல்ல சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அவர் என்னை காரில் டிராப் செய்தார்.   பிறகு நான் என் வீட்டுக்கு செல்ல எக்மோர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி ட்ரெயின் மூலம் வீட்டுக்கு சென்றேன்.  

 

அந்த வேலையில் தான் என் நண்பர் போன் செய்தார்.   இதுபோல போலீசார் ஒருவர் அவரிடம் தகராறு செய்வதாக என்னிடம் கூறினார்.  அப்போது நான் ரயில் நிலையத்தில் இருந்தபடியே எனக்கு தெரிந்த பத்திரிகை நண்பர் மூலம் தகவல் கொடுத்தேன். இதை தவறாக புரிந்து கொண்ட மீடியாக்கள் நான் சம்பவம் நடந்தபோது அங்கு இருந்ததாக கூறுவது அப்பட்டமான பொய். வேண்டுமென்றால் அந்த நேரத்தில் நான் சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருப்பது அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல அந்த வேளையில் என் நண்பரிடம் நான் போனில் பேசிக்கொண்டிருந்தேன் என்பது என் காலத்திலிருந்து தெரியும்.

 

 சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் நான் இல்லை.  வந்த போலீஸ்காரர் யார் என்று எனக்கு தெரியாது அதேபோல சில மீடியாக்களிலும் பிரபல தின நாளிதழிலும் என் ஆண்நண்பர் பெயர் கூட தப்பாக பதிவு செய்துள்ளார்கள்.  பிரசாந்த் என்ற எந்த ஒரு நண்பரும் எனக்கு தெரியாது.   சம்பவம் நடந்தபோது என்னை டிராப் செய்துவிட்டு சென்ற என் நண்பர் இப்ரான் என்பவர்தான் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்.   அவரும் அவருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டவர் என்று கூறப்படும் தலைமை காவலரும் புகார் மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.  நான் காவல் நிலையம் கூட செல்லவில்லை .  என் பெயரையும், புகழையும் கெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒரு கூட்டம் செய்த சதி வேலைதான் இந்த தவறான செய்தி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது’’ என்று நடிகை ஜூலி நக்கீரனுக்கு பேட்டி அளித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.