Jail sentence for husband and wife who misbehaved with girl

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லாடாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காங்கேயன்(36) - விஜயலட்சுமி (34) தம்பதிகள். இவர்கள் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் (கடந்த 12.07.2016) தனது கடைக்கு வந்த ஏழு வயது சிறுமி கல்லாவில் இருந்து காசு திருடி விட்டதாகக் கூறி, சிறுமியின் ஆடைகளை அகற்றி போட்டோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

Advertisment

அந்தப் புகாரின் பேரில் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவன் காங்கேயனுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை ஐந்தாயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி விஜயலட்சுமிக்கு 18 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை 2500 அபராதமும் விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.

Advertisment

இதனையடுத்து இருவரும் வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டனர்.