Skip to main content

கிராம சபைக் கூட்டத்தில் வன்முறை... ஊராட்சி துணை தலைவரைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்! 

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

issue in the village council meeting ... Road blockade demanding the arrest of the panchayat deputy leader!

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிவகாசி கலியமூர்த்தி. மிகவும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சரண்யா குமார் அதே ஊராட்சியில் துணைத்தலைவராக உள்ளார்.  இவர் சுமார் ஒரு வருட காலமாக ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் ஏதாவது இடையூறு செய்து வருவதாகவும், இதனால் ஊராட்சியில் அடிப்படை பணிகளைக் கூட செய்ய முடியாத நிலை உள்ளதாக மக்கள் மத்தியில் கூறப்படுகிறது.

 

இந்நிலையில்  மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்பார்வையாளராக காட்டுமன்னார்கோவில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு கணக்கு குறித்து பேசுகையில் துணைத்தலைவர் சரண்யாகுமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த துணைத் தலைவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை சமூகத்தின் பெயரை கூறி தன் காலில் அணிந்திருந்த காலணியால் அடித்துள்ளார். இதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 

issue in the village council meeting ... Road blockade demanding the arrest of the panchayat deputy leader!

 

இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்க தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யாகுமாரை போலீசார் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உத்தரவாதம் கொடுத்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் என்பவரை ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யாகுமார்  யாரும் எதிர்பாராத விதமாக 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில் மூன்று முறை காலணியால் அடித்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். துணை வட்டார வளர்ச்சி அலுவலரைத் தாக்கிய துணை தலைவரை வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்'' என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் பரிசு அறிவிப்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Pongal gift announcement for government employees

2024ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 238 கோடியே 92 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி, டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3000 ரூபாய் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மிகை ஊதியம் வழங்கப்படும் எனவும், 2022-23 ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் பணிபுரிந்த முழு நேர, பகுதி நேர பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சி, டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கும் 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story

விவசாயி தாக்கப்பட்ட விவகாரம்; ஊராட்சி செயலருக்கு ஜாமீன்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

A case where the farmer was issue Bail to Panchayat Secretary

 

காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கடந்த 2 ஆம் தேதி (02.10.2023) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

இந்த கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கிருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்தார். அதே சமயம் கூட்டத்தில் இருந்த ராசு என்பவரும் விவசாயியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ மக்கள் மத்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட இருவர் மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

 

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இந்த சூழலில் தலைமறைவாக இருந்த ராசுவை தனிப்படை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தாக்குதலுக்கு உட்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் இல்லை என்பதால் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்து  முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.