Skip to main content

ஐ.பி.எல். போட்டியை தடுத்து நிறுத்துவோம்: பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
PRPONDIYAN 600.jpg



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைIPLபோட்டியை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஏப்ரல் 10ம் தேதி கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்களை திரட்டி முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, 
 

தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்பிற்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டும் மோடி அரசாங்கம் கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்க்கான வகையில் நீதிமன்ற தீர்ப்பையே முடக்கப் பார்க்கிறது.
 

உடைகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கப் பார்க்கிறது. கருத்து பறிமாற்றம் என்ற பெயரில் விவாதங்களில் அவதூறு பிச்சாரங்களில் பாஜக ஈடுபடுகிறது. மிரட்டுவதும், அச்சுறுத்தியும் வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுப்படுவதை ஏற்றுக் கொள்ளாத பாஜக பிளவுபடுத்தப் பார்க்கிறது..
 

இதனை கண்டித்தும் உடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டு அதனை அமைக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டமும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.
 

போராட்டத்தில் விவசாயிகள் சங்கங்கள் பங்கேற்க திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஆதனை ஏற்று விவசாயிகள் முழுமையாக அனைத்து போராட்டங்களிலும் ஒன்றுபட்டு கலமிறங்க வேண்டும்.
 

திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி போராட்டத்திற்கு தமிழகத்தின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு பா.ம.க தானே முன்வந்து போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது வரவேற்கதக்கது. அனைத்து கட்சிகளுக்கும் எதிர்கட்சி தலைவர் அழைப்பு விடுத்து ஒன்றிணைக்க வேண்டுகிறேன்.
 

மாணவர்கள், இளைஞர்கள். முழுமையாக ஜல்லிக்கட்டு போராட்டம் போல் அகிம்சை வழியில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும். காவிரி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபவதை திசை திருப்பும் உள்நோக்கத்தோடு சென்னை IPL கிரிக்கெட் போட்டியை நடத்த பாஜக சதி செய்கிறது இதனை ஒத்தி வைக்க வேண்டும்.
 

தமிழக அரசு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைIPLபோட்டியை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஏப்ரல் 10ம் தேதி கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்களை திரட்டி முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என்றார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.