Skip to main content

கடன் செயலி ஊழியர்கள் மிரட்டல்; மனைவி, மகனுடன் வாலிபர் தற்கொலை முயற்சி 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Intimidation of loan processing staff; A teenager struggle  with his wife and son!

 

சேலம் அருகே, கடன் சுமையால் வாலிபர் குடும்பத்துடன் தூக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தைக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள தின்னப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (32). திருச்சியில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சதீஸ்குமார் தனது வேலையை சமீபத்தில் ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான சதீஸ்குமார், செல்போன் கடன் செயலிகள் மூலம் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். 

 

கடன் தொகைக்கு உண்டான வட்டி, அசல் என வாங்கிய கடனுக்கு அதிகமாகவே சுமார் 15 லட்சம் ரூபாய் வரை திருப்பிச் செலுத்தி உள்ளார். ஆனாலும் கடன் கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள் சதீஸ்குமாரை செல்போன் மூலம் தினமும் அழைத்து, மேலும் வட்டி, அசல் தொகையை செலுத்த வேண்டும் என்று ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். பணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் உன் செல்போனில் உள்ள அனைத்து வாட்ஸ்ஆப் எண்களுக்கும் உன்னையும், குடும்பத்தினரையும் ஆபாசமாக சித்தரித்து தகவல்களை வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். 

 

இதனால் மனம் உடைந்த சதீஸ்குமார், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார். தனது மனைவி, குழந்தையுடன் ஓமலூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். மருந்து கடைகளில் இருந்து 60 தூக்க மாத்திரைகளை வாங்கி வந்த சதீஸ்குமார், அதை குளிர்பானத்தில் கலந்து மனைவி, மகன் ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். மூவரும் அறையில் மயங்கிக் கிடந்தனர். 

 

இந்நிலையில் விடுதி ஊழியர் ஒருவர், அந்த அறைக்கு ஏதேனும் பொருள்கள் தேவையா? என கேட்பதற்காக அறைக் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது மூவரும் மயக்க நிலையில் அசைவற்றுக் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஓமலூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.