Skip to main content

“நடராஜரே என்னைத் தண்டிக்கட்டும்...” ; நந்தனார் வாயில் கதவை உடைத்த வாலிபரிடம் விசாரணை

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Interrogation youth who broke door Nandanar gate Chidambaram Nataraja Temple

 

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாயில் அருகே நந்தனார் நுழைந்த வாயில் எனக் கூறப்படும் வாயிலை தீட்சிதர்கள் அடைத்து வைத்துள்ளனர். மேலும் அடைத்து வைத்துள்ள இந்த இடத்தில் மரத்தாலான பெரிய கதவு ஒன்று அமைத்துள்ளனர். நந்தனார் நுழைந்த வாயிலைத் திறக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் புதன்கிழமை இரவு நடராஜர் கோவிலுக்கு வருகை தந்த வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் பூட்டப்பட்டிருந்த நந்தனார் வாயில் கதவின் பூட்டை உடைத்துள்ளார். அதனைப் பார்த்த தீட்சிதர்கள் சிதம்பரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் கோவிலுக்கு வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

அவர் சிதம்பரம் கனக சபை நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரிய வந்தது. இவர் நந்தனார் மீது பற்று கொண்டவர் என்றும், இந்த வாயிலைத் தீண்டாமை எனப் பூட்டி உள்ளார்கள். இதனை உடைக்க வேண்டும் எனவும்,  நடராஜர் எல்லாரையும் காப்பாற்றுகிறார் என்று கூறும் இவர்கள் இந்தக் கோவில் பூட்டை உடைத்தது தவறு என்றால் அவரே என்னைத் தண்டிக்கட்டும் என்றும் பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் இதற்கு வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தக் கதவுக்கு அருகே பொங்கல் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பூட்டு உடைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.