Skip to main content

அதிமுக சேர்மன் மகளுக்காக ஒன்று திரண்ட 5 கிராமங்கள்!

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

 interesting incident happened wedding chairman's daughter in Sivagangai district

 

‘சேர்மன் பொண்ணு எங்களுக்கும் பொண்ணுதான்...’ என சேர்மனின் மகளுக்காக 5 கிராம மக்கள் ஒன்று கூடி செய்துள்ள சம்பவம் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிக்கு அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்மணி பாஸ்கரன். இவர், சிவகங்கை மாவட்ட   ஊராட்சி குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், பொன்மணி பாஸ்கரனின் மகளான ஹரி பிரியா என்பவருக்கும் ஜெயக்குமார் என்பவருக்கும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

 

அதன் தொடர்ச்சியாக, மணமகள் குடும்பத்தினர் சார்பாக மணமக்களுக்கு சீர் வரிசை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக மணப்பட்டி, முத்தம்பட்டி உள்ளிட்ட 5 கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து டன் கணக்கில் பழங்கள், பித்தளை  பாத்திரங்கள், குத்து விளக்கு மற்றும் 500 கிடாவுடன் மணமகன் வீட்டிற்கு நடையைக் கட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, 350 சீர் வரிசை தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்த பெண்கள்., மேள தாளங்களோடு மணமகள் ஹரி பிரியாவுக்கு சீர் வரிசை செய்துள்ளனர்.

 

அப்போது, சீர் வரிசை செய்ய வந்த கிராம மக்களை மணமக்கள் வீட்டார் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.  இதுபோல் திருமணங்களில் உறவினர்கள் சீர் வரிசை கொண்டு வருவது வழக்கம். அதே சமயம், நகரப் பகுதிகளில் தங்களால் முடிந்த பரிசுப் பொருட்களையும் பணத்தையும் மொய்யாக எழுதுவதைத்தான் பார்த்துள்ளோம். ஆனால், ஜாதி மதங்களை கடந்து 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மணமக்களுக்கு சீர் செய்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Tragedy happened to the girl who ate mana tuber

சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், 13 வயதுள்ள மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும் நேற்று (08-03-24) இரவு வீட்டில் மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, நள்ளிரவில் அவர்கள் உறங்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அதில் உணவு செரிமானமாகாமல் சுவேதா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு மகளான வனிதாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.