Skip to main content

சார் பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை... 5 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்கள் சிக்கின!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

Vidya Vidya check at the office of the Delegate; 5 lakh rupees, important documents stuck!

 

சேலத்தில் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் விடிய விடிய நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 

சேலம் சூரமங்கலம் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக, சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜூவுக்கு அடிக்கடி புகார்கள் சென்றன. இதையடுத்து ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர், செப். 27ஆம் தேதி மாலை, சூரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

 

மாலை 05.45 மணியளவில் தொடங்கிய சோதனை, மறுநாள் அதிகாலை 05.45 மணிக்கு முடிந்தது. இதில், அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஊழியர்களிடம் இருந்து சில ஆவணங்களையும், முக்கிய டைரிகளையும் கைப்பற்றினர். இதுகுறித்து சூரமங்கலம் சார் பதிவாளர் இந்துமதி, தரகர்கள் உட்பட 6 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. 

 

இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புப் பிரிவினரின் இந்த திடீர் சோதனைக்கு வேறொரு நோக்கமும் இருப்பதாக பத்திரப்பதிவுத்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

 

இந்தப் பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுபவர் காவேரி. கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மண்டலத்தில் காவேரியை மீறி பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகள் கூட அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முடியாது. அந்தளவுக்கு அதிகாரத்தில் கொடிகட்டிப் பிறந்தார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

 

முந்தைய ஆளுங்கட்சியின் விவிஐபிக்களுக்கு நெருக்கமானவராக பார்க்கப்பட்டார் காவேரி. அதிமுக புள்ளிகள் பினாமிகள் பெயர்களில் சொத்துகளைப் பத்திரப்பதிவு செய்யும்போதும், பெயர் மாற்றம் செய்யும்போதும் அதற்கான வேலைகளைக் காதும் காதும் வைத்ததுபோல் கச்சிதமாக முடித்துக் கொடுத்துள்ளார் காவேரி. 

 

இந்த அலுவலகத்தில் சார் பதிவாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இருந்தாலும் கூட அதிமுக புள்ளிகளுக்கான பணிகள் என்று வரும்போது அதை உதவியாளரான காவேரியிடம்தான் ஒப்படைத்து வந்துள்ளனர். 

 

பொதுவாக பத்திரப்பதிவுத்துறையில் உதவியாளர் நிலையில் உள்ள ஊழியருக்கென தனி அறை கிடையாது. ஆனால் அதிமுகவின் விவிஐபிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் காவேரிக்கு மட்டும் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டது. 

 

இலை கட்சிக்காரர்களுக்குப் பத்திரப்பதிவு நடக்கிறது என்றாலே அப்பணிகளை இரவு பகலாக முடித்துக்கொடுத்திருக்கிறார். அதுபோன்ற பணிகளைப் பெரும்பாலும் மாலை 06.00 மணிக்கு மேல்தான் வைத்துக்கொள்வாராம். 

 

இந்த நிலையில்தான் செப். 27ஆம் தேதியன்றும் காவேரி சில அதிமுக புள்ளிகளின் சொத்துகளைப் பதிவு செய்ய இருப்பதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்துதான் காவேரியை கையும் களவுமாக மடக்கிப்பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் இறங்கியிருக்கிறார்கள். 

 

எனினும், இந்த சோதனையில் காவேரியிடமிருந்து லஞ்சப்பணம் பிடிபட்டதாக தெரியவில்லை. அந்த அலுவலகத்தில் இருந்து மொத்தமாக கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதிமுகவின் விவிஐபிக்கு நெருக்கமான ஊழியரைக் குறிவைத்து நடந்த இந்த சோதனை, பத்திரப்பதிவுத்துறை மற்றும் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
enforcement department raided the house of former Viralimalai Vijayabaskar MLA

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

ர.ர.க்களோ, பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையை காட்டுகிறது என்கின்றனர்.